தமிழ்நாடு

tamil nadu

"100 படங்கள் எடுத்தால் கூட ஊழல், லஞ்சத்தை ஒழிக்க முடியாது".. இந்தியன் 2 பற்றி சீமான் பேச்சு! - Seeman About Indian 2

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 5:48 PM IST

Seeman About Indian 2 Movie: இந்தியன் 2 படம் குறித்து பேசிய சீமான், ஊழல், லஞ்சம் ஒழியவில்லை. அது இருக்கும் வரை இந்தியன் 2 போன்ற படங்களுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கும். ஒவ்வொருத்தவரும் மாறாமல் ஊழல், லஞ்சத்தை ஒழிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

சீமான்
சீமான் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2 படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் சித்தார்த், விவேக், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.

சீமான் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில். இன்று சென்னை சத்யம் தியேட்டரில் இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் கமல்ஹாசன், பாபி சிம்ஹா, ஜெகன், சந்தான பாரதி, நாசர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வந்து படத்தை பார்த்தனர். படம் முடிந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “நடிகர் கமல்ஹாசனும், நானும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அவருடைய படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

திரைக்கலை பொழுதுபோக்கு கலையாக இல்லாமல், நல்ல பொழுதாக ஆக்கக்கூடிய சில படைப்புகள் உள்ளன. இப்படம் திரைக்கதை அமைத்து எடுக்கப்பட்ட படம் கிடையாது. அன்றாடம் நடக்கக்கூடிய அவலங்கள், நாம் சந்திக்கக்கூடிய பிரச்னைகள் உள்ளிட்டவற்றை இப்படம் ஆழமாக எடுத்துரைக்கிறது. நமக்கு எதற்கு பிரச்சினை என்று கடந்து போவது தான் நாட்டில் மிகப்பெரிய பிரச்சினை. அவரவர் வீட்டை சுத்தம் செய்யுங்கள்.

அவரவர் தெருக்களை சுத்தம் செய்யுங்கள். நாடு தானாக சுத்தமாகும். இந்தியன் தாத்தா வர வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள். யாரோ ஒருவர் வரவேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறீர்கள். நீங்களே மாற்ற முயற்சிக்கலாம் என்பதை தான் படம் சொல்லுகிறது. குட்டை, குளம், கிணறு, ஏரி நஞ்சாக மாறியது என்றால் தண்ணீரை மாற்றிக் கொள்ளலாம். கடலே நஞ்சாக மாறி விட்டால் என்ன செய்வது நாம் தான் மாற வேண்டும்.

படத்தை பொழுதுபோக்காக பார்க்காமல் கேடுகெட்ட உலகத்தை மாற்றும் சமூகத்திற்கான படமாக பாருங்கள். ஊழல், லஞ்சம் ஒழியவில்லை. அது இருக்கும் வரை இது போன்ற படங்களுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கும். ஊழல், லஞ்சத்தை நாடு முழுவதும் எதிர்க்கிறார்கள். பின் யார் கொடுக்கிறார்கள்? யார் வாங்குகிறார்கள்? கோயிலில் சிறப்பு தரிசனம் உள்ளிட்டவற்றில் இருந்து தான் ஊழல் பிறக்கிறது.

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை எனும் போது ஊழல் உருவாகிறது. தாயின் கருவறை முதல் கோயில் கருவறை வரை லஞ்சம் இருக்கிறது. ஒவ்வொருத்தவனும் சரியானால் நாடு சரியாயிடும். ஒரு நேர்மையானவர் அதிகாரத்துக்கு வந்தால் ஊழல் லஞ்சம் மாறிவிடும்” என்று பேசினார்.

இதையும் படிங்க:"தாத்தா வராரே, கதறவிடப் போறாரே"... சேனாபதி கெட்டப்பில் தியேட்டருக்கு வந்த கூல் சுரேஷ்! - cool suresh in indian 2 getup

ABOUT THE AUTHOR

...view details