தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

எம்.ராஜேஷ் இயக்கத்தில் அதர்வா உடன் இணையும் அதிதி சங்கர்! - production no 5

Atharvaa Aditi Shankar Movie: 'சிவா மனசுல சக்தி' பட இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'புரொடக்ஷன் நம்பர் 5' என பெயரிடப்பட்டுள்ளது.

புரொடக்ஷன் நம்பர் 5
அதர்வா அதிதி சங்கர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 3:33 PM IST

சென்னை:இயக்குநர் ராஜேஷ் காமெடி திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமான இயக்குநராக அறியப்படுகிறார். இவரது சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ஆனால், அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில், தற்போது ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ வாரி பிலிம் பி.ரங்கநாதன் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். நியூ ஏஜ் எண்டர்டெயினராக உருவாகும் இப்படத்தில், நடிகர் அதர்வா முரளி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். தற்காலிகமாக இந்த படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 5' என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார் மற்றும் ஒளிப்பதிவை சுகுமாரன் கையாள்கிறார்.

படம் குறித்து நடிகர் அதர்வா முரளி கூறும்போது, ​​“திரையுலகில் மிகுந்த அனுபவம் கொண்ட பி.ரங்கநாதன் போன்ற சிறந்த தயாரிப்பாளருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தரமான பொழுதுபோக்கு கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும், ஊக்குவிப்பதிலும், அதற்காக செலவு செய்வதிலும் அவருடைய ஈடுபாடு அபாரமானது.

இயக்குநர் ராஜேஷின் திரைக்கதைக்கு, இவர் தயாரிப்பு செய்து, அதில் நான் நடிப்பது பெருமையான விஷயம். முழுக்க முழுக்க எண்டர்டெய்ன்மெண்ட் படங்களை எதிர்பார்த்து திரையரங்குகளுக்கு வருபவர்களை இந்த படம் நிச்சயம் ஏமாற்றாது" என்றார். இயக்குநர் எம்.ராஜேஷ் கூறும்போது, ​​“காலத்திற்கு ஏற்றாற் போல, சினிமாவின் ஒவ்வொரு ஜானரிலும் மாற்றம் ஏற்படும்.

இதையும் படிங்க:ஹாலிவுட்டில் ரீமேக்காகும் "த்ரிஷ்யம்" படம் - முதல் இந்திய படம் என சிறப்பு!

இருப்பினும், தமிழ் சினிமா ரசிகர்கள் எண்டர்டெயினர் படங்களை ஒருபோதும் கொண்டாடத் தவறியதில்லை. பார்வையாளர்கள் திரையரங்குகளில் அவர்களை மகிழ்விக்கும் இது போன்ற தருணங்களை என் படங்களில் கொடுக்க எனக்கு இடம் கொடுத்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன். இந்த படம் மூலம் ரசிக்கத்தக்க பொழுதுபோக்கு படத்தைக் கொடுக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்றார்.

ஸ்ரீவாரி பிலிம் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன், ​​“இத்தனை வருடங்களில் விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் நான் கவனித்த வரையில், எண்டர்டெயினர் படங்களை தமிழ் ரசிகர்கள் நிபந்தனையின்றி கொண்டாடுவதை நேரில் பார்த்திருக்கிறேன். அவர்களின் 2-3 மணிநேர சினிமா அனுபவத்தை, முற்றிலும் ரசிக்க வைக்கும் ஒரு கண்ணியமான பொழுதுபோக்கு படத்தை அவர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

அந்த வகையிலான படம்தான் இது. அதர்வா முரளி தனது அர்ப்பணிப்பு மற்றும் திறமையான நடிப்பிற்காக பெயர் பெற்றவர். இந்தப் படம் ஒரு பொழுதுபோக்கு படமாக, வித்தியாசமான பரிமாணத்தில் அவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும். அனைத்து வயதினரையும் கவரும் வகையில், ஒரு திரைக்கதையை ராஜேஷ் உருவாக்கியுள்ளார்.

பல திறமைகள் மற்றும் சிறந்த நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அதிதி ஷங்கருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தற்போது ஜெயம் ரவியின் படப் பணியில் ராஜேஷ் பிஸியாக இருக்கிறார். அது முடிந்ததும், விரைவில் இதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க:"வணங்கான் படப்பிடிப்பில் இயக்குநர் பாலா என்னை அடித்தார்" - பிரேமலு நடிகை பகீர் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details