ஹைதராபாத்:பாலிவுட்டின் பிரபல நட்சத்திர ஜோடியாக வலம் வந்தவர்கள் அபிஷேக் - ஐஸ்வர்யா ராய் பச்சன் தம்பதி. சமீப காலமாக இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் தங்களது 16 வருட திருமண வாழ்வை முடித்து கொள்ள இருப்பதாக வதந்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த அம்பானி வீட்டு திருமணத்தில் இருவரும் தனி தனியே பங்கேற்றனர்.
பிரிந்து வாழ்கிறார்களா அபிஷேக்- ஐஸ்வர்யா தம்பதி?:இந்த திருமணத்தில் அபிஷேக் பச்சன் தனது தந்தை, தாய், சகோதரியுடன் கலந்து கொண்ட நிலையில் ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராதனவோடு கலந்து கொண்டார். இந்த சம்பவம் மீண்டும் அபிஷேக் - ஐஸ்வர்யா ராய் பச்சன் தம்பதியின் விவகரத்து தொடர்பான சர்ச்சை பேச்சுக்களுக்கு வழிவகுத்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல கோணத்தில் தகவல் பரவி வந்தாலும் அபிஷேக் - ஐஸ்வர்யா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் தர வில்லை.
நிரை விவாகரத்து என்றால் என்ன?நட்சத்திர ஜோடிகளின் திருமண முறிவு குறித்து அலசும் போது "நிரை விவாகரத்து (GREY DIVORCE) " எனப்படும் விவாகரத்துக்களை பற்றி அறிந்து கொள்ளுவது அவசிமாகிறது. இந்தியாவில் நட்சத்திர ஜோடிகளின் திருமண முறிவுகள் குறித்த அறிவிப்பு தொடர்கதையாக வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி ஆழ்த்தியுள்ளது எனலாம். ஆனால் இந்த "நிரை விவாகரத்து" சொல் புதிதாக தோன்றலாம்.
விவாகரத்தும் உளவியலும்:இந்த வகை விவகரத்து மேற்கத்திய நாடுகளில் சாதரண போக்காக இருந்தது. தற்போது இந்தியாவின் நட்சத்திர குடும்பங்கள் மத்தியில் வேரூன்றத் தொடங்கியுள்ளது. இது குறித்து வேத மறுவாழ்வு மற்றும் ஆரோக்கியத்தில் மூத்த உளவியலாளர் ஆஷி தோமர் கூறுகையில், “இந்த நிரை விவாகரத்து என்பது 50 வயதுக்கு மேற்பட்டோர் தங்களது திருமண பந்ததை முறித்து கொண்டு. தங்களது முதுமையில் நிரை முடிகள் வளர்ந்த காலத்தில் பல ஆண்டுகால திருமணத்தில் இருந்து விடுப்பட்டு விவாகரத்து பெருவதாகும்.
இதையும் படிங்க:சவுந்தர்யா VS சுனிதா... பிக்பாஸ் ஸ்டார் ஹோட்டல் டாஸ்கில் முற்றும் மோதல்!
விவாகரத்தில் பொருளாதார பின்னடைவு பெண்களுக்கா?இந்த போக்கு கடந்த காலங்களாக இருந்து வந்த திருமண வாழ்வு மீதான அழுத்தங்களை கலையும் துணிச்சல் செயலாக பார்க்கப்படுகிறது. என்னென்றால் இந்தியாவில் திருமண பந்ததில் இருக்கும் ஆண் பொருளாதார ரீதியாக பெரும்பாலும் நிலைத்து உள்ளனர். ஆனால் பெண் பொருளாதார ரீதியாக தனது கனவரை சார்ந்து இருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த முடிவுக்கு முதல் முக்கியமான காரணம் பெண்கள் நிதி சார்பற்று நிலையில் இருக்க தயாராக உள்ளார்கள் என கணிக்க முடிகிறது.