டெல்லி : நாடு முழுவதும் தசரா பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், டெல்லி, துவாரகாவில் ஸ்ரீராம் லீலா சங்கம் சார்பில் 211 அடி உயரம் கொண்ட ராவணன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இந்த உருவ பொம்மை தான் இந்தியாவின் மிகப்பெரிய உருவ பொம்மை ஆகும்.
டெல்லியில் தசரா பண்டிகை கோலாகலம்! பிரதமர் மோடி பங்கேற்பு
டெல்லியில் நடைபெற்ற தசரா பண்டிகையில், 211 அடி உயரம் கொண்ட ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்வினை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல கட்சி தலைவர்களும் கண்டுகளித்தனர்.
By PTI
Published : 5 hours ago
ராவனன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்வினை அம்பு விட்டு தொடங்கிய குடியரசுத் தலைவர், பிரதமர் (Credits - narendra modi X Page)
இந்நிகழ்வினை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் ராவணன் தம்பி கும்பகர்ணன் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்