டெல்லி: ரஷ்யாவைச் சேர்ந்த செஸ் வீரர் கேரி காஸ்பரோவ் தனது எக்ஸ் பதிவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி முதலில் ரேபரேலியில் வெல்லட்டும். அதன்பின், செஸ் போட்டியிலுள்ள முதன்மை வீரர்களை வெல்லலாம் என தெரிவித்து. சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவத் தொடங்கியது. இதனையடுத்து அந்த பதிவு குறித்து செஸ் வீரர் கேரி காஸ்பரோவ் முழு விளக்கத்தை அளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று (மே.3) உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பாகத் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்ததது தொடர்பாகக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில், "ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து பலர் கருத்துகளைக் கூறலாம். ஆனால் ராகுல் காந்தி திறமை வாய்ந்த அரசியல்வாதி மற்றும் திறமை வாய்ந்த செஸ் வீரரும் கூட. காங்கிரஸ் கட்சி ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து நீண்ட ஆலோசனை செய்து அரசியல் உத்தியைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பாஜகவையும் அதன் ஆதரவாளர்களையும் கலங்கடித்துள்ளது" என பதிவிட்டிருந்தார்.
இதற்கு முன்பே ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளத்தில் செஸ் மீதான ஆர்வம் குறித்தும். தனக்குப் பிடித்த செஸ் வீரர் ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் என்றும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.