லக்னோ:உத்தரப் பிரதேசத்தில் காலியாக உள்ள 9 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் 9 பேரும் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உ.பி.யில் கேட்ஹரி (அம்பேத்கர் நகர்), கர்ஹால் (மெயின்புரி), மீராபூர் (முசாபர்நகர்), காசியாபாத், மஜவான் (மிர்சாபூர்), சிஷாமாவ் (கான்பூர்), கெய்ர் (அலிகார்), புல்பூர் (பிரயாக்ராஜ்), மற்றும் குந்தர்கி (மொராதாபாத்) ஆகிய 9 தொகுதிகளுக்கு நவம்பர் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கண்ட தொகுதிகளில் 8 சட்ட மன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற தேர்தலில் எம்பி-க்களாக தேர்வு செய்யப்பட்டதால் இந்த தொகுதிகள் காலியாகின. எம்எல்ஏ-வாக இருந்த இர்பான் சோலங்கி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் சிஷாமாவ் தொகுதி காலியானது. தற்போது, 9 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காங்கிரஸ் சமாஜ்வாடி கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, காங்கிரஸ் எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட இரண்டு தொகுதிகளை வழங்க அகிலேஷ் யாதவ் முன் வந்தார். அதன்படி, காங்கிரஸ் காசியாபாத் மற்றும் கெய்ர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் என கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது மேற்கண்ட 9 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என அகிலேஷ் யாதவ் ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க:'என் மேல அன்பே இல்ல'.. தங்கையால் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வந்த சோதனை! கோர்ட் வரை சென்ற விஷயம்!
அந்த ட்வீட்டில், 'இந்த தேர்தல் சீட்டுகளை பற்றியது அல்ல, வெற்றியைப் பற்றியது. இந்த வியூகத்தின் கீழ், சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் சின்னமான சைக்கிளில் 9 தொகுதிகளிலும் இந்திய கூட்டணியின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.