தமிழ்நாடு

tamil nadu

கர்நாடகாவின் ஹாவேரியில் அதிகாலை நடந்த கோர விபத்தில் 13 பேர் உயிரிழப்பு! - Road Accident In Karnataka

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 9:08 AM IST

Haveri Van Accident: கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் லாரி மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கிய சுற்றுலா வேன்
விபத்தில் சிக்கிய சுற்றுலா வேன் (Credits - ETV Bharat)

ஹாவேரி: கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்திற்கு உட்பட்ட பியாட்கி தாலுகாவில் உள்ள குண்டேனஹள்ளி கிராஸில் இன்று (ஜூன் 28) அதிகாலை 4 மணியளவில் முன்னே சென்ற லாரியின் பின்பகுதியில் சுற்றுலா வேன் ஒன்று அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒரு சிறுவன் காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்தில் உயிரிழந்த அனைவரும் கர்நாடக மாநிலம் ஷிவமொகாவைச் சேர்ந்தவர்கள் என்றும் முதற்கட்டத் தகவல் தெரியவந்துள்ளது.

மேலும், விபத்து தொடர்பாக பியாட்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விபத்தில் சிக்கியவர்கள் சவுதாத்தி பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் ஷிவமொகாவுக்கு திரும்பியபோது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:டெல்லி விமான நிலையம் டெர்மினல் -1ல் மேற்கூரை இடிந்து விபத்து..நசுங்கிய கார்கள்! காரில் இருந்தவர்களின் நிலை?

ABOUT THE AUTHOR

...view details