திருப்புகழ் தந்த திருச்சி வயலூர் முருகன் கோவில் பங்குனி உத்திரத்திருவிழா - திருச்சி மாவட்டம்
🎬 Watch Now: Feature Video

திருச்சி: திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த திருத்தலமான வயலூர் முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் இன்று பங்குனி உத்திரத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை முதலே பெருந்திரளான பக்தர்கள் காவடி எடுத்தும், பால் குடங்கள் எடுத்துவந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். மேலும், பங்குனி உத்திரத்திருநாளில் திருச்சி வயலூர் முருகப்பெருமானை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST