அத்திவரதர் புகழ் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்; தங்க சிம்ம வாகனத்தில் வீதி உலா
காஞ்சிபுரம் உலகப்பிரசித்தி பெற்றஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயிலில் வைகாசி மாதப் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று (மே 13) மாலை தங்க சிம்ம வாகனத்தில் உற்சவர் வரதராஜப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து நகரின் முக்கிய வீதிகளில் திரு வீதி உலா வந்தார். வழியெங்கும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். வழியெங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபாராதனை செய்து சாமி தரிசனம் செய்தனர். பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.