ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை - தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வந்த காவேரி ஆறு
🎬 Watch Now: Feature Video

கா்நாடக மாநிலத்தின் காவிரி கரையோர பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கிறது. நேற்று முன் தினம் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வந்தடைந்தது. காவிரியில் திறந்து விடப்படும் உபரிநீரின் அளவு நேற்று அதிகரித்துள்ளதால் தமிழ்நாட்டிற்கு வரும் நீர் வரத்து மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட ஆட்சியா் சாந்தி தடை விதித்துள்ளார்.