thumbnail

By

Published : Apr 17, 2022, 1:27 PM IST

ETV Bharat / Videos

கள்ளக்குறிச்சி அருகே தீப்பற்றி எரிந்த கார்!

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே உள்ள தண்ணீர்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராஜ். இவர் அம்பாசிடர் காரை பழுது நீக்குவதற்காக விழுப்புரத்தில் உள்ள ஒரு மெக்கானிக் செட்டுக்கு கொண்டு செல்லும்போது வழியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் காரில் டீசல் கசிவு ஏற்பட்டது. இதனால், திடீரென கார் தீ பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. இதை சூதாரித்துக் கொண்ட கார் ஓட்டுநர் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததுள்ளார். அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும், தீயினால் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.