செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு : வெள்ள அபாய எச்சரிக்கை - செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு
🎬 Watch Now: Feature Video

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தற்போது வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஏரியில் 19 சிறிய மதகுகள், 5 பெரிய மதகுகள் உள்ளன. இதில் இரண்டாவது மதகு மட்டும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது. மேலும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.