திருவள்ளூரில் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திருவள்ளூர் : மாதவரத்தில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் உத்தரவிற்கு இணங்க கூடுதல் இணை ஆணையர் பாண்டியன், காவல் துறை வடக்கு மாவட்டத் துணை ஆணையர் கிருஷ்ணராஜ், போக்குவரத்து உதவி ஆணையர் மலைச்சாமி ஆகியோர் தலைமையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை, ஹெல்மெட் அணிவதன் அவசியம் ஆகியவை குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இதில் கலைஞர்கள் நடனமாடி ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.