ETV Bharat / state

அக்.6ல் மெரினாவில் விமான சாகசம்.. பொதுமக்கள் பார்க்க ஏற்பாடுகள் என்ன? - flight adventure in marina beach

மெரினா கடற்கரைக்கு வந்து விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க முடியாதவர்கள் திருவல்லிக்கேணி, கோவளம், காசிமேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து பார்க்கலாம் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

வமான சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை
வமான சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6ஆம் தேதி காலை 11 மணி அளவில் விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. அப்போது இந்த சாகச விமானங்கள் காலை தாம்பரம் விமானப் படைத்தளத்தில் இருந்து புறப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் சாகசத்தை நிகழ்தவுள்ளன. இதில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான 72 விமானங்கள் பங்கேற்க உள்ளன.

விமானப்படை சாகசமும் சென்னை மெரினாவும்: விமானப்படையின் விமான சாகசம் கடந்த 2003ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நிலையில் 21 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் சென்னையில் நடைபெற உள்ளது. பொதுவாக இந்த விமானப்படை சாகச நிகழ்ச்சி டெல்லியில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி நடத்த சென்னையை தேர்ந்தெடுத்துள்ளது.

மூன்றாவது நாளாக ஒத்திகை: இந்நிலையில் அதற்கான மூன்று நாட்கள் ஒத்திகை நிகழ்வு இன்றுடன் நிறைவு பெற்றது. இதில் சுக்கோய் சு 30, MI 17 VH ஹெலிகஃப்டர்கள், அட்வான்ஸ் லைட் ஹெலிகஃப்டர் (ALH) ஹால் தேஜா, மல்ட்டிரோல் காம்பேட் ஏர்கிராப்ட், ரஃபேல் ஏர்கிராப்ட் ஆகியவை ஒத்திகை பயிற்சி எடுத்தனர்.

முக்கிய அறிவிப்பு: இந்த விமானப்படை சாகச நிகழ்ச்சி அக்டோபர் 6ஆம் தேதி காலை 11 மணி - 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த விமான சாகச நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விமான சாகச நிகழ்ச்சிக்கு எந்த வழியாக வரவேண்டும், தங்கள் வரும் வாகனத்தை எங்கு நிறுத்த வேண்டும், வெயிலின் தாக்கத்தில் இருத்து தற்காத்து கொள்ளுவது போன்ற முக்கிய அறிவிப்புகள் விமானப்படை அதிகாரிகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விமானப் படை சாகச ஒத்திகை நிகழ்வு: சென்னை மெரினாவில் குவிந்த பொதுமக்கள்!

சாலை மாற்றம்: அதன்படி, "நிகழ்ச்சி நடைபெறும் நாளை மறுநாள் லைட்ஹவுஸ் முதல் உழைப்பாளர் சிலை வரை உள்ள காமராஜர் சாலை பொது மக்கள் பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் வாகனங்களை ராணிமேரி கல்லூரி, லேடி விலிங்டன் வளாகம், மாநில கல்லூரி வளாகத்தில் நிறுத்த வேண்டும்.

மாடியில் இருந்து பார்க்கலாம்: பின் சாலையை கடந்து மெரினா கடற்கரைக்கு பொது மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து விமானப்படையின் சாகசத்தை பார்க்கலாம். மேலும் மெரினா கடற்கரைக்கு வந்து பார்க்க முடியாதவர்கள் திருவல்லிகேணி, கோவளம், காசிமேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் விமான சாகச நிகழ்வு அமைந்துள்ளது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்: வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் விமான படை சார்பில் பொது மக்களுக்கு தொப்பி வழங்கப்பட உள்ளது. ஆனாலும் அவர்கள் முன்னெச்சரிக்கையாக குடைகள், தொப்பி மற்றும் தண்ணீர் பாட்டில், சன் கிளாஸ் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கடும் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விமான சாகசம் நிகழ்ச்சிக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் விமான படை அதிகாரிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கலந்துக்கொள்ள உள்ளதால் மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

சென்னை: இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6ஆம் தேதி காலை 11 மணி அளவில் விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. அப்போது இந்த சாகச விமானங்கள் காலை தாம்பரம் விமானப் படைத்தளத்தில் இருந்து புறப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் சாகசத்தை நிகழ்தவுள்ளன. இதில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான 72 விமானங்கள் பங்கேற்க உள்ளன.

விமானப்படை சாகசமும் சென்னை மெரினாவும்: விமானப்படையின் விமான சாகசம் கடந்த 2003ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நிலையில் 21 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் சென்னையில் நடைபெற உள்ளது. பொதுவாக இந்த விமானப்படை சாகச நிகழ்ச்சி டெல்லியில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி நடத்த சென்னையை தேர்ந்தெடுத்துள்ளது.

மூன்றாவது நாளாக ஒத்திகை: இந்நிலையில் அதற்கான மூன்று நாட்கள் ஒத்திகை நிகழ்வு இன்றுடன் நிறைவு பெற்றது. இதில் சுக்கோய் சு 30, MI 17 VH ஹெலிகஃப்டர்கள், அட்வான்ஸ் லைட் ஹெலிகஃப்டர் (ALH) ஹால் தேஜா, மல்ட்டிரோல் காம்பேட் ஏர்கிராப்ட், ரஃபேல் ஏர்கிராப்ட் ஆகியவை ஒத்திகை பயிற்சி எடுத்தனர்.

முக்கிய அறிவிப்பு: இந்த விமானப்படை சாகச நிகழ்ச்சி அக்டோபர் 6ஆம் தேதி காலை 11 மணி - 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த விமான சாகச நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விமான சாகச நிகழ்ச்சிக்கு எந்த வழியாக வரவேண்டும், தங்கள் வரும் வாகனத்தை எங்கு நிறுத்த வேண்டும், வெயிலின் தாக்கத்தில் இருத்து தற்காத்து கொள்ளுவது போன்ற முக்கிய அறிவிப்புகள் விமானப்படை அதிகாரிகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விமானப் படை சாகச ஒத்திகை நிகழ்வு: சென்னை மெரினாவில் குவிந்த பொதுமக்கள்!

சாலை மாற்றம்: அதன்படி, "நிகழ்ச்சி நடைபெறும் நாளை மறுநாள் லைட்ஹவுஸ் முதல் உழைப்பாளர் சிலை வரை உள்ள காமராஜர் சாலை பொது மக்கள் பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் வாகனங்களை ராணிமேரி கல்லூரி, லேடி விலிங்டன் வளாகம், மாநில கல்லூரி வளாகத்தில் நிறுத்த வேண்டும்.

மாடியில் இருந்து பார்க்கலாம்: பின் சாலையை கடந்து மெரினா கடற்கரைக்கு பொது மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து விமானப்படையின் சாகசத்தை பார்க்கலாம். மேலும் மெரினா கடற்கரைக்கு வந்து பார்க்க முடியாதவர்கள் திருவல்லிகேணி, கோவளம், காசிமேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் விமான சாகச நிகழ்வு அமைந்துள்ளது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்: வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் விமான படை சார்பில் பொது மக்களுக்கு தொப்பி வழங்கப்பட உள்ளது. ஆனாலும் அவர்கள் முன்னெச்சரிக்கையாக குடைகள், தொப்பி மற்றும் தண்ணீர் பாட்டில், சன் கிளாஸ் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கடும் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விமான சாகசம் நிகழ்ச்சிக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் விமான படை அதிகாரிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கலந்துக்கொள்ள உள்ளதால் மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.