சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய வாகனம்: போக்குவரத்து பாதிப்பு!
ஈரோடு: சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காகத் தோண்டப்பட்ட குழியால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியது. இந்நிலையில், அவ்வழியாக வந்த சரக்கு லாரியின் சக்கரம் சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கியது. இதையடுத்து சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.