கிணற்றில் விழுந்த 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு
வேலூர் மாவட்டம் எல்லப்பன்பட்டியை அடுத்த எடத்தெரு பகுதி கிணற்றில் விழுந்த 10 அடி நீள மலைப்பாம்பை வினோத்குமார், அசோக்குமார் என்ற பாம்பு பிடி வீரர்கள் பிடித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், மலைப்பாம்பை மீட்டு ஒடுக்கத்தூர் வனச்சரகம் கருத்த மலை காப்பு காட்டில் விட்டனர்.