நாமக்கல்லில் காவல் துறையின் ஊர்வலத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
நாமக்கல்: மாவட்ட காவல் துறை சார்பில் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் 300க்கும் மேற்பட்ட காவல் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். பூங்கா சாலையில் தொடங்கிய இந்த அணிவகுப்பை, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிக்குமார் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலமானது பூங்கா சாலை, கோட்டை சாலை, கடைவீதி, பரமத்தி சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக நடைபெற்றது.