thumbnail

தீவிரமடையும் கரோனா: படுக்கைகள் இல்லாமல் அவதியுறும் நோயாளிகள்!

By

Published : May 16, 2021, 9:28 AM IST

Updated : May 16, 2021, 9:42 AM IST

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 32,903 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களில் மட்டுமே 28 பேர் உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,250 ஆக்ஸிஜன் படுக்கைகள் உள்ள நிலையில், தற்போது இடம்இல்லாததால் புதிய நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் படுக்கைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் இரவு முழுவதும் நோயாளிகள் வெளியில் வாகனங்களிலேயே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. படுக்கைகள் கிடைக்காததால் சுமார் 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை மருத்துவமனை வளாகத்திலேயே காத்திருக்கும் சூழல் உள்ளதாக, நோயாளிகளின் உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Last Updated : May 16, 2021, 9:42 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.