திருச்சி: கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி நீர் இன்று காலை 11 மணிக்கு வேளாண்துறை, உணவுத்துறை, சுற்றுலாத்துறை உட்பட ஆறு துறைகளின் அமைச்சர்கள், ஆறு மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள் முன்னிலையில் கல்லணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் திருச்சி, நாகை, தஞ்சை ஆகிய மாவட்ட விவசாயிகள் பயனடைய வாய்ப்புள்ளது.