காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பனை விதைகள் நட்ட அரசு அலுவர்கள்!

By

Published : Oct 2, 2019, 10:56 PM IST

thumbnail
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை ஊராட்சியில் முதலமைச்சரின் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் நங்காஞ்சியாறு நீர்த்தேக்கத்திலிருந்து உபரிநீர் வெளியேறும் வாய்க்கால்கள் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடவேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று குடிமராமத்து பணிகள் நடைபெறும் வாய்க்கால் கரையோரங்களில் 2000 பனை விதைகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை பழனி சார் ஆட்சியர் உமா தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.