பொன்னை ஆற்றில் வெள்ளம் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - பொன்னை ஆறு
🎬 Watch Now: Feature Video

வேலூர்: ஆந்திரப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கலவகுண்டா அணை நிரம்பி, அதிலிருந்து வெளியேறும் நீரால் பொன்னை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு காட்பாடி வழியாக வந்துகொண்டிருக்கிறது. இதனால், பொன்னை ஆற்றின் கரையோரக் கிராமங்களான பாலே குப்பம், தெங்கால், பொன்னை, பரமசாத்து, மாத்தாண்ட குப்பம், கீரை சாத்து, கொல்லப்பள்ளி, மேல்பாடி, வெப்பாலை கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.