பொதுமக்களுக்கு தர்பூசணி பழம் கொடுத்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.பழனி எடையார்பாக்கம், மதுரமங்கலம், சோகண்டி, காந்தூர், பட்டுமுடையார்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர் சாலையோரத்தில் இருந்த தர்பூசணி பழ கடைக்கு சென்ற பழனி தர்பூசணி பழத்தை தானே அறுத்து பொதுமக்களுக்கு வழங்கி அதிமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்து இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினார்.