மீனவர் வலையில் சிக்கிய அரியவகை மனித முகம் கொண்ட மீன்... இதன் விஷம் மனிதனையே கொன்றுவிடுமாம்! - கொடிய விஷம் கொண்ட பலூன் மீன்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14731311-thumbnail-3x2-man.jpg)
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், வாசலதிப்பா என்ற இடத்தில் மீனவர்களின் வலையில் அரிய வகை பலூன் மீன் ஒன்று சிக்கியது. பார்ப்பதற்கு மனித முகங்கள் கொண்டு இருக்கும் இந்த மீன் ஆபத்து வாய்ந்தது. அதனைத் தொட்டால் பலூன் போல் பெருத்துவிடும் தன்மை உடையது. உலகின் இரண்டாவது மிக அதிக நச்சைக் கக்கும் தன்மை கொண்ட மீன் இது என்று கூறப்படுகிறது. இதன் விஷம் மனித உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST