மதுபானத்தில் மிதந்த பூச்சிகள் - அதிர்ந்துபோன குடிமகன்கள்
திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை அரசு டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபானத்தில் பூச்சிகள் உயிரிழந்த நிலையில் இருந்ததால் மதுப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு குடிமகன் ஒருவர் இன்று (ஜன.17) வாங்கிய மதுபான பாட்டிலில் இறந்த நிலையில், பூச்சிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். குடிமகன் இதுகுறித்து, டாஸ்மாக் ஊழியர்களிடம் முறையிட்டதற்கு கடை ஊழியர்கள் எவ்வித பதிலும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST