அண்ணாமலையார் கோயில் ஐப்பசி மாத பிரதோஷம்..! பெரிய நந்திக்கு சிறப்பு ஆராதனை..! - etvbharat tamil
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11-11-2023/640-480-19997880-thumbnail-16x9-tem.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Nov 11, 2023, 7:42 AM IST
திருவண்ணாமலை: ஐப்பசி மாத பிரதோஷ தினத்தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நேற்று (நவ.10) மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. அமாவாசை மற்றும் பௌர்ணமி இரண்டு தினங்களுக்கு மகா நந்திக்கு பிரதோஷம் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், சிறப்புப் பெற்ற ஐப்பசி மாத பிரதோஷ தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேகத்தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பெரிய நந்திக்கு அறுகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய பலவகை மாலை அணிவித்துச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது. பிரதோஷ தினத்தின் போது நந்தி பகவானை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும் என்பது ஐதீகம். அண்ணாமலையார் கோயில் ஐப்பசி மாத பிரதோஷத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.