thumbnail

By

Published : Mar 7, 2023, 7:54 AM IST

ETV Bharat / Videos

மாசி மகம் பௌர்ணமி பூஜை: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா, சித்ரா பௌர்ணமி, மாதா மாதம் வரும் பௌர்ணமி கிரிவலம் உலகப் பிரசித்தி பெற்றது. 

குறிப்பாக கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் சித்ரா பௌர்ணமி ஆகிய இரண்டு தினங்களில் சுமார் 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து 14 கிமீ சுற்றளவு கொண்ட மலையையே சிவனாக கருதி கிரிவலம் மேற்கொள்வார்கள். 

அதேபோன்று மாதா மாதம் வரும் பௌர்ணமி தினத்தன்று சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து கிரிவலம் மேற்கொள்வார்கள். 

தற்போது மாசி மாத பௌர்ணமியான நேற்று, பக்தர்கள் கிரிவலம் வர தொடங்கினர். மாசி மாத பௌர்ணமி நேற்று மாலை 5.08 மணிக்கு துவங்கி இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6.45 மணிக்கு நிறைவடையும் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆதலால் வெளிமாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: வடமாநிலத்தொழிலாளர்கள் ஊர் சென்றதால் கட்டுமானத்தொழில் முடக்கம் - சிவில் இன்ஜினியரிங் சங்கம்

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.