Actor Marimuthu : இயக்குநர் மாரிமுத்துவின் உடலுக்கு நடிகர் விமல் அஞ்சலி! - Actor Vimal tribute to Marimuthu
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-09-2023/640-480-19468398-thumbnail-16x9-tni.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Sep 9, 2023, 1:20 PM IST
தேனி: சென்னையில் நேற்று (செப்.8) மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு திரைப்பட நடிகர் விமல் அஞ்சலி செலுத்தினார்.
திரைப்பட இயக்குநரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (செப். 8) காலை சென்னையில் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, அவரின் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, வருசநாடு அருகே பசுமலை தேரி என்ற கிராமத்தில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு உறவினர்கள், ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், மாரிமுத்துவின் உடலுக்கு திரைப்பட நடிகர் விமல் நேரில் சென்று மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினார். நடிகர் விமல் நடித்த புலிவால் திரைப்படத்தை மாரிமுத்து தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனியார் தொலைக்காட்சியில் வெளியாகும் எதிர்நீச்சல் நாடகத்தின் மூலம் பொதுமக்கள் மத்தியில் மாரிமுத்து, ஆதிகுணசேகரனாக பிரபலம் அடைந்தார். இந்நிலையில், அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்தனர்.