அலைகளின் ஓசையோடு மேளதாள இசை: குமரியில் சுற்றுலா தின கொண்டாட்டம் - சுற்றுலாத் துறை சார்பில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்பு
🎬 Watch Now: Feature Video

நேற்று கன்னியாகுமரியில் "சுற்றுலா மற்றும் வேலை வாய்ப்புகள் அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம்" என்ற தலைப்பின் கீழ் உலகச் சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சுற்றுலாத் துறை சார்பில் வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சங்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும் கன்னியாகுமரி ஸ்ரீமணியா கேட்டரிங் கல்லூரி சார்பில் மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி நிகழ்ச்சியும் நடைபெற்றது.