குளிர்காலம் என்பது நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு கடினமான காலமாக திகழ்ந்து வருகிறது. ஏனென்றால், நீரிழவு நோயை கட்டுப்படுத்தும் உணவு முறைகள், உடற்பயிற்சிகள் குளிர்காலத்தில் பின்பற்ற முடியாமல் போக அதிக வாய்ப்புள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது முக்கியமாகும். இந்தியாவில் மட்டும் சுமார் 50 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் எச்.பி. ஜிண்டால் நேச்சர் க்யூர் நிறுவனத்தின் துணை தலைமை மருத்துவ அலுவலர் ஹெச்.பி. பாரதி தெரிவித்துள்ளார். வரும் 2025க்குள், 60 மில்லியனாக எண்ணிக்கை அதிகரிக்கூடும் என எச்சரிக்கிறார். எனவே, குளிர்காலத்தை நீரிழிவு நோயாளிகள் கட்டுப்படுத்த 10 இயற்கை மற்றும் யோகா உதவிக்குறிப்புகளை பகிர்ந்துள்ளார்.
டயட்
காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பயறு, பீன்ஸ் மற்றும் ஓட்மீல் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இனிப்புகள், கொழுப்புகள் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், நீரிழிவு நோயாளிகள் உலர்ந்த பழங்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவற்றில் உள்ள பிரக்டோஸ் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
உடலில் நீரேற்றம்
உடலை நீரேற்றுத்துடன் வைத்திருப்பது அவசியம். மற்ற பானங்களில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளதால், நீர் அருந்துவது சிறந்தது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
யோகா
நீரிழிவு நோயாளிகளுக்கு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க யோகா பெரிதும் உதவுகிறது. யோகா செய்கையில் தசைகள் வலுவான நிலையில் மாறுவதால், ரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
சிகிச்சை முறைகள்
பிசியோதெரபி, ஹைட்ரோ தெரபி போன்ற சிகிச்சை முறைகள் உடலுக்கு நல்லிணக்கத்தை பல வழிகளில் மீட்டெடுக்க முடியும். இவை உடல் எடை இழப்புக்கு உதவுகின்றன, மன அழுத்த அளவைக் குறைக்கின்றன, ரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன.
தூக்கம்
சரியான தூக்கம் பல பாதிப்புகளிலிருந்து உடலை பாதுகாக்கிறது. நீரிழிவு நோயாளிகள் தினமும் குறைந்தது 6-7 மணிநேரம் தொடர்ச்சியான தூக்கத்தை இலக்காக கொள்ள வேண்டும். இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மன ஆரோக்கியம்
கவலை, மனநிலை மாற்றம், குழப்பம், மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் நீரிழிவு நோயாளிகளுக்கு நிச்சயம் இருக்கக்கூடும். அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவது, பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது போன்றவை மூலம் மன ஆரோக்கியத்தை மீட்டெடுக்க முடியும்
சுகாதாரம்
நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது சோப்பு போட்டு கை கழுவ வேண்டும். இருப்பிடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சுகாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.
எடை குறைக்க வேண்டும்
அதிகப்படியான உடல் எடை கொண்டவர்களின் உடல் செயல்பாட்டில் மாறுதல் ஏற்படும். எனவே, உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருப்பது அவசியம். சரியான உடற்பயிற்சிகள் மூலம் அவற்றை அடைய முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நோயெதிர்ப்பு சக்தி இல்லாத உணவை தவிர்க்க வேண்டும்
நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கக் கூடிய அதிக கொழுப்புள்ள உணவு, ஆல்கஹால், காஃபின் மற்றும் வெள்ளை சர்க்கரை ஆகியவற்றிலிருந்து நீரிழிவு நோயாளிகள் விலகியிருக்க வேண்டும்.