ETV Bharat / state

சொத்து தகராறு: சாலையில் நடந்து சென்ற பெண் வெட்டிக் கொலை! - விருதுநகர் மாவட்ட குற்றச் செய்திகள்

விருதுநகர்: ராஜபாளையம் அருகே சொத்து தகராறு காரணமாக பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

சாலையில் நடந்து சென்ற பெண் வெட்டி கொலை
சாலையில் நடந்து சென்ற பெண் வெட்டி கொலை
author img

By

Published : Sep 20, 2020, 1:46 AM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அய்யனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லீலாவதி (55). இவர் தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். இவர் சாலையில் நடந்து செல்லும்போது அடையாளம் தெரியாத நபர்களால் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கீழராஜகுலராமன் காவல் துறையினர் சம்பவ இடத்திலிருந்த உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இவரது தங்கையின் மருமகனான முருகன் என்பவர் சொத்து தகராறு காரணமாக இந்த கொலையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கீழராஜகுலராமன் காவல் துறையினர் தப்பியோடிய முருகனை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தலைமையாசிரியர் மனைவி கொலை - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அய்யனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லீலாவதி (55). இவர் தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். இவர் சாலையில் நடந்து செல்லும்போது அடையாளம் தெரியாத நபர்களால் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கீழராஜகுலராமன் காவல் துறையினர் சம்பவ இடத்திலிருந்த உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இவரது தங்கையின் மருமகனான முருகன் என்பவர் சொத்து தகராறு காரணமாக இந்த கொலையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கீழராஜகுலராமன் காவல் துறையினர் தப்பியோடிய முருகனை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தலைமையாசிரியர் மனைவி கொலை - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.