விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அய்யனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லீலாவதி (55). இவர் தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். இவர் சாலையில் நடந்து செல்லும்போது அடையாளம் தெரியாத நபர்களால் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கீழராஜகுலராமன் காவல் துறையினர் சம்பவ இடத்திலிருந்த உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இவரது தங்கையின் மருமகனான முருகன் என்பவர் சொத்து தகராறு காரணமாக இந்த கொலையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கீழராஜகுலராமன் காவல் துறையினர் தப்பியோடிய முருகனை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தலைமையாசிரியர் மனைவி கொலை - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!