ETV Bharat / state

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து; மேலும் ஒரு பெண் உயிரிழப்பு!

author img

By

Published : Mar 4, 2021, 6:34 AM IST

விருதுநகர்: சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்றுவந்த, மேலும் ஒரு பெண் உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

பட்டாசு ஆலை வெடிவிபத்து
பட்டாசு ஆலை வெடிவிபத்து

சாத்தூர் அச்சங்குளம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பிப்ரவரி 12ஆம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலே 19 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பிப்ரவரி 20ஆம் தேதி மதுரை ராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, படந்தால் பகுதியைச் சேர்ந்த வைஜெயந்திமாலா (30) உயிரிழந்தார்.

தொடர்ந்து பிப்ரவரி 24ஆம் தேதி சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடுச்சூரங்குடியைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி ஜெயா (50) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மார்க்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் (32) என்பவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் நேற்று (மார்ச்3) மதுரை ராசாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடுச்சூரங்குடியைச் சேர்ந்த ராஜம்மாள்(54) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுவரை பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. தற்போதுவரை 15க்கும் மேற்பட்டவர்கள் அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை நடுச்சூரங்குடி கிராமத்தில் மட்டும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விதிமீறல் பட்டாசு ஆலைகளுக்கு சீல்!

சாத்தூர் அச்சங்குளம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பிப்ரவரி 12ஆம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலே 19 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பிப்ரவரி 20ஆம் தேதி மதுரை ராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, படந்தால் பகுதியைச் சேர்ந்த வைஜெயந்திமாலா (30) உயிரிழந்தார்.

தொடர்ந்து பிப்ரவரி 24ஆம் தேதி சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடுச்சூரங்குடியைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி ஜெயா (50) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மார்க்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் (32) என்பவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் நேற்று (மார்ச்3) மதுரை ராசாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடுச்சூரங்குடியைச் சேர்ந்த ராஜம்மாள்(54) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுவரை பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. தற்போதுவரை 15க்கும் மேற்பட்டவர்கள் அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை நடுச்சூரங்குடி கிராமத்தில் மட்டும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விதிமீறல் பட்டாசு ஆலைகளுக்கு சீல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.