ETV Bharat / state

திரிவிக்ரம ஆசனத்தில் அம்பு எய்தி உலக சாதனை! - Viruthunagar student Shakthi Shivani record in Yogasanas

விருதுநகர்: 10ஆம் வகுப்பு மாணவி சக்தி ஷிவானி திரிவிக்ரம யோகாசனத்தின் மூலம்  வில் அம்பு எய்தி உலகச் சாதனை படைத்தார்.

world record in Yoga
world record in Yoga
author img

By

Published : Dec 7, 2019, 1:09 PM IST

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் - லதா தம்பதியின் மகளான சக்தி ஷிவானி, விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக யோகாசனத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டுவரும் இவர், யோகாசனத்தில் மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

குறிப்பாக, தன் தலையில் தண்ணீர் குவளையில் எரியும் மெழுகுவர்த்தியை வைத்துக்கொண்டு கீழே விழாமலும், மெழுகுவர்த்தி அணையாமலும் தொடர்ந்து 50 யோகாசனம் செய்து உலக சாதனை படைத்து, நோபல் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றார்.

இதையும் படிங்க: யோகாவில் உலக சாதனை படைத்த விருதுநகர் பள்ளி மாணவி!

தற்போது அந்த வரிசையில் அவர் திரிவிக்ரமாசனத்தின் மூலம் மீண்டும் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அந்த ஆசனத்தின் படி, அவர் ஒற்றைக் காலில் நின்றபடி, ஒரு கையால் ஒரு காலை பிடித்தும், மறு கையால் அம்பை பிடித்தவாறும் தனது வாயினால் 12 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை 43 நொடிகளில் துல்லியமாக மூன்று முறை எய்தி உலக சாதனைப் படைத்தார். இந்த ஆசனத்தில் இதுபோன்ற சாதனைப் படைப்பது இதுவே முதல்முறையாகும்.

இச்சாதனை படைத்ததன் மூலம், நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்த அரியவகை சாதனை படைத்த இவரை பள்ளி ஆசிரியர்களும் பள்ளி தலைமை ஆசிரியரும் பாராட்டினார்கள்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் - லதா தம்பதியின் மகளான சக்தி ஷிவானி, விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக யோகாசனத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டுவரும் இவர், யோகாசனத்தில் மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

குறிப்பாக, தன் தலையில் தண்ணீர் குவளையில் எரியும் மெழுகுவர்த்தியை வைத்துக்கொண்டு கீழே விழாமலும், மெழுகுவர்த்தி அணையாமலும் தொடர்ந்து 50 யோகாசனம் செய்து உலக சாதனை படைத்து, நோபல் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றார்.

இதையும் படிங்க: யோகாவில் உலக சாதனை படைத்த விருதுநகர் பள்ளி மாணவி!

தற்போது அந்த வரிசையில் அவர் திரிவிக்ரமாசனத்தின் மூலம் மீண்டும் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அந்த ஆசனத்தின் படி, அவர் ஒற்றைக் காலில் நின்றபடி, ஒரு கையால் ஒரு காலை பிடித்தும், மறு கையால் அம்பை பிடித்தவாறும் தனது வாயினால் 12 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை 43 நொடிகளில் துல்லியமாக மூன்று முறை எய்தி உலக சாதனைப் படைத்தார். இந்த ஆசனத்தில் இதுபோன்ற சாதனைப் படைப்பது இதுவே முதல்முறையாகும்.

இச்சாதனை படைத்ததன் மூலம், நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்த அரியவகை சாதனை படைத்த இவரை பள்ளி ஆசிரியர்களும் பள்ளி தலைமை ஆசிரியரும் பாராட்டினார்கள்.

Intro:விருதுநகர்
06-12-19

10 ம் வகுப்பு மாணவி த்ரி விக்ரமாசனம் மூலம் 43 நொடிகளில் 12 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை மூன்று முறை சரியாக வில் அம்பால் எய்து உலக சாதனை

Tn_vnr_03_arc_arrow_record_vis_script_7204885Body:விருதுநகர்
06-12-19

10 ம் வகுப்பு மாணவி த்ரி விக்ரமாசனம் மூலம் 43 நொடிகளில் 12 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை மூன்று முறை சரியாக வில் அம்பால் எய்து உலக சாதனை

விருதுநகரில் 10 ம் வகுப்பு மாணவி த்ரி விக்ரமாசனம் மூலம் 43 நொடிகளில் 12 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை 6 முறை முயற்சித்து மூன்று முறை சரியாக இலக்கை எய்து உலக சாதனை படைத்து நோபுள் வேல்ட் ரெக்கர்ட்ஸ் புத்தகத்தில்இடம் பிடித்தார்!

விருதுநகரைச் சேர்ந்த குமார் - லதா தம்பதியின் மகள் ஷக்தி ஷிவானி விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக யோகாசன பயிற்சி பெற்று வரும் மாணவி
த்ரிவிக்ரமாசனம் முறையில் ஒற்றைக் காலில் நின்று ஒரு கையால் ஒரு கால் பிடித்தும் மறு கையால் அம்பை பிடித்தவாறு
வாயினால் அம்புகளை 43 நொடிகளில் 12 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை 6 முறை அம்பு எய்து முயற்சி அதில் 3 முறை சரியாக இலக்கை அடைத்து உலக சாதனை படைத்து நோபல் வோல்ட் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார். இச்சாதனை நோபல் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. மேலும் அதற்கான சான்றிதழும் பதக்கமும் மாணவி ஷக்தி ஷிவானிக்கு வழங்கப்பட்டது சாதனை படைத்த மாணவியை பள்ளி ஆசிரியர்களும் பள்ளி தலைமை ஆசிரியரும் பாராட்டினார்கள்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.