ETV Bharat / state

விறகு எடுத்து போடுவதில் தகராறு - கூலி தொழிலாளியை கொலை செய்த காவலாளி

author img

By

Published : Jun 4, 2020, 5:13 PM IST

விருதுநகர்: ராஜபாளையம் அருகே அரிசி ஆலையில் பணிபுரிந்த கூலி தொழிலாளியை கொலை செய்த காவலாளி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

murder
murder

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கண்ணன் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக சேத்தூர் ஊரக காவல் துறை வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தது.

அரிசி ஆலையில் காவலாளியாகப் பணியாற்றும் அதேபகுதியைச் சேர்ந்த பெரியாண்டவர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். வேலை பார்க்கும் இடத்தில் இருவருக்கு இடையே அவ்வபோது விறகு எடுத்து போடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கண்ணனை கொலை செய்ததாக பெரியாண்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து பெரியாண்டவரை காவல் துறையினர் திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:விருதுநகரில் பரபரப்பு: கூலித் தொழிலாளி வெட்டிப் படுகொலை!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கண்ணன் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக சேத்தூர் ஊரக காவல் துறை வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தது.

அரிசி ஆலையில் காவலாளியாகப் பணியாற்றும் அதேபகுதியைச் சேர்ந்த பெரியாண்டவர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். வேலை பார்க்கும் இடத்தில் இருவருக்கு இடையே அவ்வபோது விறகு எடுத்து போடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கண்ணனை கொலை செய்ததாக பெரியாண்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து பெரியாண்டவரை காவல் துறையினர் திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:விருதுநகரில் பரபரப்பு: கூலித் தொழிலாளி வெட்டிப் படுகொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.