ETV Bharat / state

'தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கும் முதலமைச்சர்' - மாணிக் தாகூர் எம்.பி., சாடல் - அதிமுகவை சாடி பேசிய மாணிக்கம் தாகூர்

விருதுநகர்: தமிழ்நாடு மக்களை முட்டாளாக்குவது போல் முதலமைச்சர் பேசி வருவதாக மக்களவை உறுப்பினர் மாணிக் தாகூர் தெரிவித்தார்.

manikam thagore
manikam thagore
author img

By

Published : Jan 26, 2020, 7:52 PM IST

விருதுநகரில் காமராஜர் இல்லத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அதில், "தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு உதாரணம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு. டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடந்த முறைகேட்டை விசாரணை செய்ய வெளிமாநிலத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற தனி நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.

செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மாணிக் தாகூர்

அதிமுக அரசு, மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தை கண்மூடித்தனமாக ஆதரித்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்குவது போல் முதலமைச்சர் பேசுகிறார். அதிமுக பாஜகவின் கிளை கட்சி போல் செயல்படுகிறது. தமிழ்நாடு தீவிரவாதிகளின் மாநிலமாக மாறிவருகிறது என பொன்னார் கூறிய கருத்திற்கு ஜெயக்குமார் பதில் சொல்லியே ஆக வேண்டும்‌" எனக் கூறினார்.

விருதுநகரில் காமராஜர் இல்லத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அதில், "தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு உதாரணம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு. டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடந்த முறைகேட்டை விசாரணை செய்ய வெளிமாநிலத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற தனி நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.

செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மாணிக் தாகூர்

அதிமுக அரசு, மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தை கண்மூடித்தனமாக ஆதரித்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்குவது போல் முதலமைச்சர் பேசுகிறார். அதிமுக பாஜகவின் கிளை கட்சி போல் செயல்படுகிறது. தமிழ்நாடு தீவிரவாதிகளின் மாநிலமாக மாறிவருகிறது என பொன்னார் கூறிய கருத்திற்கு ஜெயக்குமார் பதில் சொல்லியே ஆக வேண்டும்‌" எனக் கூறினார்.

Intro:விருதுநகர்
26-01-2020

தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பதற்கு உதாரணம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு - விருதுநகர் பாராளுன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் பேட்டி

Tn_vnr_03_manikam_thaqur_byte_vis_script_7204885Body:விருதுநகரில் காமராஜர் இல்லத்தில் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் குடியரசு தின விழா உறுதிமொழி ஏற்றதையடுத்து விருதுநகர் பாராளுன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார் அதில் தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பதற்கு உதாரணம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு. டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடந்த முறைகேட்டை விசாரணை செய்ய வெளிமாநிலத்தை சேர்ந்த உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற தனி நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். தமிழக முதல்வர் டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை மறைக்க முயல்வார் எனவே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த விஷயத்தில் தலையிட்டு உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்த எந்த திட்டமாக இருந்தாலும் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆதரவோடே நிறைவேற்றுகின்றனர். தமிழக அரசு மத்திய அரசின் எந்த ஒரு திட்டத்தையும் சட்டத்தை எதிர்த்தது இல்லை. அனைத்தையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றன என்பதற்கு உதாரணம் தான் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் என்றார். தமிழக மக்களை முட்டாளாக்குவது போல் முதலமைச்சர் பேசுகிறார். அதிமுக பிஜேபியின் கிளை கட்சி போல் செயல்படுகிறது. தமிழகம் தீவிரவாதிகளின் மாநிலமாக மாறிவருகிறது என பொன்னார் கூறிய கருத்திற்கு ஜெயக்குமார் பதில் சொல்லியே ஆக வேண்டும்‌. காவல் ஆய்வாளர் வில்சன் கொலை சிவகாசி சிறுமி பாலியல் பலாத்காரம் இவையிரண்டுமே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதற்கு உதாரணம். இவ்வாறு சட்டம் ஒழுங்கு சரியில்லாத காரணத்தால் பாதிக்கப்படும் குடும்பத்திற்கோ நபர்களுக்கோ நிவாரணம் என்ற பெயரில் வழங்கி ஏழைகளை அவமரியாதை செய்கிறது தமிழக அரசு என பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் கொறடாவுமான மாணிக்கதாகூர் பேட்டிConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.