ETV Bharat / state

ஒரு வயது ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு; பெற்றோரிடம் தீவிர விசாரணை - Rescue of an adult male child in Virudhunagar

விருதுநகர்: காரியாபட்டி அருகே ஒரு வயது ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு
ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு
author img

By

Published : Feb 6, 2020, 5:46 PM IST

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பணியாளர் குடியிருப்பில் அமல்ராஜ் - சுஷ்மிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது ஒரு வயது மகன், வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். குழந்தை உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகவும் குழந்தையின் தந்தையே தண்ணீர் தொட்டியில் தூக்கிப் போட்டு கொலை செய்ததாகவும் கூறி குழந்தையின் தாயார் காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காரியாபட்டி காவல் துறையினர் விசாரணை செய்து வந்தனர்.

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அமல்ராஜ், சுஷ்மிதா ஆகியோர் 12ஆம் வகுப்பு படிக்கும்போது காதல் செய்தது, சுஷ்மிதா 7 மாதம் கர்ப்பமாக இருந்தது, அதனால் இருவரும் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது தெரியவந்தது.

ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு

பின்னர், இருவீட்டாரின் பேச்சுவார்த்தையை அடுத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற நாள்முதல் சுஷ்மிதாவிடம் அமல்ராஜ் தொடர்ந்து பிரச்னையில் ஈடுபட்டு வந்துள்ளார். சுஷ்மிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து அமல்ராஜ் சுஷ்மிதாவிடம் இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என்று கூறி பிரச்னையில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து சுஷ்மிதா அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரித்த காவலர்கள் அமல்ராஜை சுஷ்மிதாவிடம் சேர்ந்து வாழ்வதற்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர். மீண்டும் இருவருக்கும் பிரச்னை வர, சுஷ்மிதாவின் தந்தை மதுரை சரக டிஐஜியிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவை விசாரித்த டிஐஜி ஆனிவிஜயா இருவரிடமும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வீட்டிற்கு அனுப்பியுள்ளார் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் குழந்தை இன்று வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளது. ஆகவே குழந்தையின் உயிரிழப்பில் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அமல்ராஜ், சுஷ்மிதாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பாதாளச் சாக்கடையில் குழந்தையின் சடலம்: தாய் கைது

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பணியாளர் குடியிருப்பில் அமல்ராஜ் - சுஷ்மிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது ஒரு வயது மகன், வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். குழந்தை உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகவும் குழந்தையின் தந்தையே தண்ணீர் தொட்டியில் தூக்கிப் போட்டு கொலை செய்ததாகவும் கூறி குழந்தையின் தாயார் காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காரியாபட்டி காவல் துறையினர் விசாரணை செய்து வந்தனர்.

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அமல்ராஜ், சுஷ்மிதா ஆகியோர் 12ஆம் வகுப்பு படிக்கும்போது காதல் செய்தது, சுஷ்மிதா 7 மாதம் கர்ப்பமாக இருந்தது, அதனால் இருவரும் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது தெரியவந்தது.

ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு

பின்னர், இருவீட்டாரின் பேச்சுவார்த்தையை அடுத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற நாள்முதல் சுஷ்மிதாவிடம் அமல்ராஜ் தொடர்ந்து பிரச்னையில் ஈடுபட்டு வந்துள்ளார். சுஷ்மிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து அமல்ராஜ் சுஷ்மிதாவிடம் இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என்று கூறி பிரச்னையில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து சுஷ்மிதா அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரித்த காவலர்கள் அமல்ராஜை சுஷ்மிதாவிடம் சேர்ந்து வாழ்வதற்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர். மீண்டும் இருவருக்கும் பிரச்னை வர, சுஷ்மிதாவின் தந்தை மதுரை சரக டிஐஜியிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவை விசாரித்த டிஐஜி ஆனிவிஜயா இருவரிடமும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வீட்டிற்கு அனுப்பியுள்ளார் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் குழந்தை இன்று வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளது. ஆகவே குழந்தையின் உயிரிழப்பில் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அமல்ராஜ், சுஷ்மிதாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பாதாளச் சாக்கடையில் குழந்தையின் சடலம்: தாய் கைது

Intro:விருதுநகர்
05-02-2020

1 வயது ஆண் குழந்தை மர்மமான முறையில் தணண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு

Tn_vnr_01_baby_death_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பணியாளர் குடியிருப்பில் வசித்து வரும் அமல்ராஜ் சுஷ்மிதா தம்பதியின் ஒரு வயது மகன் அவரது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு. இறப்பில் மர்மம் உள்ளதாகவும் குழந்தையின் தந்தையே தண்ணீர் தொட்டியில் தூக்கி போட்டு கொலை செய்ததாக கூறி குழந்தையின் தாயார் மற்றும் குழந்தையின் தாத்தா காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார். குழந்தை இறப்பு குறித்து காரியாபட்டி போலீசார் விசாரனை. காரியாபட்டி அருகே திருமால் புதுப்பட்டியைச் சேர்ந்த சூசை மாணிக்கத்தின் மகள் சுஷ்மிதா 2018 ஆம் ஆண்டு காரியாபட்டி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 படித்து கொண்டிருந்த போது அதே ஊரே சேர்ந்த லுகாஸ் மகன் அமல்ராஜ் என்பவருக்கு தொடர்பு இருந்துள்ளது. சுஷ்மிதா 7 மாத கர்பிணியாக இருந்தது பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியவந்தது. ஆசிரியர்கள் அப்பெண்ணை அழைத்து விசாரித்தபோது அமல்ராஜ் உடன் பழக்கம் ஏற்பட்டு 7 மாத கர்ப்பிணியாக உள்ளேன் என்று தெரியப்படுத்தியுள்ளார். இதனை ஆசிரியர்கள் அப்பெண்ணின் தந்தைக்கு தகவல் தெரிவித்து பள்ளியிலிருந்து சான்றிதழ் கொடுத்து வெளியே அனுப்பிவிட்டுள்ளனர். பின்னர் இருவீட்டாரின் பேச்சுவார்த்தைக்கு பின் சுஷ்மிதாக்கும் அமல்ராஜ்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற நாள்முதல் சுஷ்மிதாவிடம் அமல்ராஜ் தொடர்ந்து பிரச்சனையில் ஈடுபட்டு வந்துள்ளார். சுஷ்மிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அமல்ராஜ் சுஷ்மிதாவிடம் இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என்று தொடர்ந்து பிரச்சனையில் ஈடுபட்டு வந்துள்ளார். குழந்தை பிறந்தும் 6 மாதமாகியும் குழந்தையின் தந்தை அமல்ராஜ் குழந்தையை பார்க்க வரவில்லை. என்று அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரித்த காவலர்கள் அமல்ராஜை சுஷ்மிதாவிடம் சேர்ந்து வாழ சொல்லி அனுப்பி உள்ளனர். மீண்டும் இருவருக்கும் பிரச்சனை வர சுஷ்மிதாவின் தந்தை மதுரை சரக டிஐஜி யிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவை விசாரித்த டிஐஜி ஆனிவிஜயா, அருப்புக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசனை விசாரிக்க பரிந்துரை செய்து காரியாபட்டி காவல்நிலையத்தில் சார்பு ஆய்வாளர் தமிழழகன் சில நாட்களுக்கு முன்பு விசாரணை நடத்தி இருவரிடமும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி தைப்பொங்கலை முன்னிட்டு சுஷ்மிதா, அமல்ராஜ் வீட்டிற்க்கு சென்று உள்ளார். குழந்தை பிறந்து பத்து மாதம் ஆகியும் அமல்ராஜ் பெற்றோர்கள் லூகாஸ் - விமலா குழந்தையை தொட்டு கூட பார்க்கவில்லை என்றும், மேலும் குழந்தை இருப்பது எனக்கு மிகவும் இடைஞ்சலாக உள்ளது என அமல்ராஜ் சுஷ்மிதாவின் தந்தை சூசை மாணிக்கத்திடம் தெரிவித்த நிலையில், இன்று மதியம் ஒரு மணி அளவில் சுஷ்மிதா காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு சென்று வீட்டிற்கு திரும்பியபோது குழந்தை இறந்து கிடந்துள்ளது. பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சுஷ்மிதா தனது கணவர் தான் குழந்தையே தண்ணீரில் போட்டு கொலை செய்துள்ளார் என்று புகார் மனு அளித்துள்ளார். புகார் மனுவை காரியாபட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.