ETV Bharat / state

சொத்துக்காகத் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது - virudhunagar Man kills father over asset dispute

விருதுநகர்: ராஜபாளையம் அருகே சொத்துக்காக பெற்ற தந்தையை அடித்துக் கொன்ற மகனை சேத்தூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

virudhunagar
virudhunagar
author img

By

Published : May 8, 2020, 12:49 AM IST

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமண பெருமாள் (60). இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இவரது பெயரில் சிறிய அளவில் நிலம் இருந்துள்ளது.

இந்த இடத்தை தனக்கு பிரித்துக் கொடுக்க வலியுறுத்தி அவருடைய மூன்றாவது மகனான குருவையா (40) லட்சுமண பெருமாளிடம் பலமுறை வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், நிலப் பிரச்னை தொடர்பாகத் தந்தை மகன் இருவருக்கும் இடையே தகராறு முற்றியதில் மகன் குருவையா, லட்சுமண பெருமாளை அடுத்துக் கொலை செய்துள்ளார்.

தகவலறிந்த சேத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலைமையிலான காவல்துறையினர், நேரில் சென்று லட்சுமண பெருமாளின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கொலை செய்த குருவையாவை கைது செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக பெற்ற தந்தையையே மகன் அடித்துக் கொன்ற சம்பவம் சேத்தூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : விஷ வாயு கசிவுகள் ஓரு பார்வை!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமண பெருமாள் (60). இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இவரது பெயரில் சிறிய அளவில் நிலம் இருந்துள்ளது.

இந்த இடத்தை தனக்கு பிரித்துக் கொடுக்க வலியுறுத்தி அவருடைய மூன்றாவது மகனான குருவையா (40) லட்சுமண பெருமாளிடம் பலமுறை வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், நிலப் பிரச்னை தொடர்பாகத் தந்தை மகன் இருவருக்கும் இடையே தகராறு முற்றியதில் மகன் குருவையா, லட்சுமண பெருமாளை அடுத்துக் கொலை செய்துள்ளார்.

தகவலறிந்த சேத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலைமையிலான காவல்துறையினர், நேரில் சென்று லட்சுமண பெருமாளின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கொலை செய்த குருவையாவை கைது செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக பெற்ற தந்தையையே மகன் அடித்துக் கொன்ற சம்பவம் சேத்தூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : விஷ வாயு கசிவுகள் ஓரு பார்வை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.