ETV Bharat / state

தலைகுப்புற கவிழ்ந்த வேன் - உடல் நசுங்கி இருவர் உயிரிழப்பு!

விருதுநகர்: சாத்தூர் அருகே வேன் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில், இருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Sep 14, 2019, 2:24 PM IST

van-collapsed

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சல்வார்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் பணிபுரிபவர்களை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வேனில் அழைத்துச் சென்று வருவது வழக்கம்.

அந்த வகையில், இன்று சிவகாசி, சூரநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 15 தொழிலாளர்களை கார்த்திக்ராஜா என்பவர் வேனில் ஏற்றிக்கொண்டு ஆலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

வேன் சுப்பிரமணியபுரம் அருகே செல்கையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியது. பின்னர் திடீரென சாலை நடுவே தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கவிழ்ந்த வேகத்தில் அதிலிருந்த சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த குருமுத்து(36), துரைப்பாண்டி(17) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 14 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

சாத்தூர் அருகே தலைகுப்புற கவிழ்ந்த வேன் - உடல் நசுங்கி இருவர் உயிரிழப்பு

தகவலறிந்து அங்கு விரைந்த சாத்தூர் காவல் துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சல்வார்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் பணிபுரிபவர்களை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வேனில் அழைத்துச் சென்று வருவது வழக்கம்.

அந்த வகையில், இன்று சிவகாசி, சூரநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 15 தொழிலாளர்களை கார்த்திக்ராஜா என்பவர் வேனில் ஏற்றிக்கொண்டு ஆலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

வேன் சுப்பிரமணியபுரம் அருகே செல்கையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியது. பின்னர் திடீரென சாலை நடுவே தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கவிழ்ந்த வேகத்தில் அதிலிருந்த சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த குருமுத்து(36), துரைப்பாண்டி(17) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 14 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

சாத்தூர் அருகே தலைகுப்புற கவிழ்ந்த வேன் - உடல் நசுங்கி இருவர் உயிரிழப்பு

தகவலறிந்து அங்கு விரைந்த சாத்தூர் காவல் துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Intro:விருதுநகர்
14-09-19

கார் நிலைதடுமாறி சாலை நடுவே கவிழ்ந்தது 2 பேர் பலி

Tn_vnr_01_car_accident_vis_script_7204885Body:விருதுநகர்
14-09-19

கார் நிலைதடுமாறி சாலை நடுவே கவிழ்ந்தது 2 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சல்வார்பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலை பணியாளர்கள் சிவகாசி,சூரநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பட்டாசு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தாயில்பட்டி வழியாக சல்வார்பட்டிக்கு வந்து கொண்டு இருந்தது. வேனை கார்த்திக்ராஜா என்பவர் ஓட்டி வந்துள்ளார். வேன் சுப்பிரமணியபுரம் அருகே வந்து கொண்டிருக்கும் போதுஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைதடுமாறி சாலை நடுவே தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்த பட்டாசு தொழிலாளர்கள் 16 பேர் பலத்த காயம் அடைந்து உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த குருமுத்து (36 )துரைப்பாண்டி ( 16 )ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 14 பேர் பலத்த காயம் அடைந்தனர்.பின்னர் தகவல் இருந்தா வெம்பக்கோட்டை மற்றும் சாத்தூர் நகர் போலீசார் மற்றும் அருகில் உள்ள கிராமத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர் பின்னர் காயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். பின்னர் காயமடைந்த அனைவரும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.