சிவகாசி நகராட்சி வருவாய் ஆய்வாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த முத்துக்குமரன் இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று நகராட்சி பொதுப்பணித்துறை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் பணிமாறுதல் ஆணையில், முத்துக்குமரனுக்கு அருப்புக்கோட்டை நகராட்சிக்கு பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
![Transfer order issued for dead person](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-vnr-04-wrong-transfer-order-photo-script-7204885_28112019191755_2811f_1574948875_130.jpg)