ETV Bharat / state

அரசுப் பள்ளிக்கு தண்ணீர் தொட்டி அமைத்து கொடுத்த முன்னாள் மாணவர்கள்

author img

By

Published : Jul 28, 2019, 5:16 PM IST

விருதுநகர்: 20 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளிக்கு தண்ணீர் தொட்டி அமைத்து கொடுத்துள்ளது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

goverment school water tank


விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் கிராமத்தில் இயங்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 650க்கும் அதிகமான மாணவ - மாணவிகள் பயின்றுவருகின்றனர். இந்தப் பள்ளியில் தற்போது அடிப்படை தேவையான குடிநீர் வசதி இல்லாததால் மாணவ - மாணவிகள் நீண்ட தூரம் நடந்துசென்று குடிநீர் எடுத்துவர வேண்டிய நிலை உள்ளது.

இதையறிந்த அப்பள்ளியில் 1999ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற 75 முன்னாள் மாணவர்கள் இணைந்து தாங்கள் படித்த பள்ளிக்கு ரூ.1லட்சம் மதிப்பிலான 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி அமைத்து தந்துள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளி
அரசு மேல்நிலைப்பள்ளி

இது குறித்து அப்பள்ளியின் தலைமையாசிரியர் கூறுகையில், ’அரசை நம்பாமல் முன்னாள் மாணவர்கள் இதுபோல் இணைந்து செயல்பட்டாலே மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரம் உயரும்’ என்றார்.

அரசுப் பள்ளிக்கு தண்ணீர் தொட்டி அமைத்து கொடுத்த முன்னாள் மாணவர்கள்


விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் கிராமத்தில் இயங்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 650க்கும் அதிகமான மாணவ - மாணவிகள் பயின்றுவருகின்றனர். இந்தப் பள்ளியில் தற்போது அடிப்படை தேவையான குடிநீர் வசதி இல்லாததால் மாணவ - மாணவிகள் நீண்ட தூரம் நடந்துசென்று குடிநீர் எடுத்துவர வேண்டிய நிலை உள்ளது.

இதையறிந்த அப்பள்ளியில் 1999ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற 75 முன்னாள் மாணவர்கள் இணைந்து தாங்கள் படித்த பள்ளிக்கு ரூ.1லட்சம் மதிப்பிலான 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி அமைத்து தந்துள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளி
அரசு மேல்நிலைப்பள்ளி

இது குறித்து அப்பள்ளியின் தலைமையாசிரியர் கூறுகையில், ’அரசை நம்பாமல் முன்னாள் மாணவர்கள் இதுபோல் இணைந்து செயல்பட்டாலே மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரம் உயரும்’ என்றார்.

அரசுப் பள்ளிக்கு தண்ணீர் தொட்டி அமைத்து கொடுத்த முன்னாள் மாணவர்கள்
Intro:
விருதுநகர்
28-07-19

20 ஆண்டுகளுக்கு பிறகு அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் ஒன்றுகூடி அரசு பள்ளியில் தண்ணீர் தொட்டியை திறந்து வைத்தனர்.Body:அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசே நம்பியிருக்கும் தேவையில்லை பழைய மாணவர்களின் கூட்டு முயற்சியே போதுமானது - அரசு பள்ளி ஆசிரியர் பேட்டி

விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1999ஆம் ஆண்டு பயின்ற பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிக்கு தற்போதைய முக்கிய பிரச்சனைையான குடி தண்ணீர் பிரச்சனை தீர்க்கும் நோக்கில் பள்ளிக்கு தண்ணீர் தொட்டி அமைத்து தரப்பட்டது

விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்போது 650க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தற்போது அடிப்படை தேவையான குடிநீர் வசதி போதிய அளவு இல்லாததால் மாணவ மாணவிகள் நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது
இச்சூழ்நிலையில் கடந்த 1999ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற 75 பழைய மாணவ மாணவிகள் 20 வருடத்திற்க்கு பின்பு தங்கள் படித்த பள்ளியில் சந்திக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
இந்த நிகழ்வின் போது தங்கள் படித்த பள்ளிக்கு ஏதேனும் வசதி செய்து தர எண்ணி தற்போது பள்ளிக்கு அடிப்படை தேவையான குடிநீர் பிரச்சனை தீர்க்க முடிவு செய்து ஒரு லட்சம் மதிப்பிலான 500 லிட்டர் கொள்ளவு கொண்ட தண்ணீர் தொட்டியை பள்ளிக்கு அமைத்து கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் இந்த பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் ஒன்றிணைத்து ஒன்றுகூடல் நிகழ்ச்சியை நடத்தினர். இதில் பழைய மாணவர்கள் தங்களுடைய பழைய நட்பு கதைகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக காணப்பட்டனர் மேலும் அரசு பள்ளிகளில் இருக்கக்கூடிய தேவைகளை அரசு தான் சரி செய்ய வேண்டும் என்றில்லை பழைய மாணவர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து அரசு பள்ளியை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றலாம் என அரசு பள்ளி பழைய மாணவ மாணவிகள் சார்பில் கூறப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.