ETV Bharat / state

அரசு அறிவித்த நிவாரணத் தொகையை வழங்குவதில் அலட்சியம் செய்யும் அலுவலர்கள்!

author img

By

Published : Aug 17, 2019, 2:28 PM IST

விருதுநகர்: தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு அறிவித்த நிவாரணத் தொகையை வழங்குவதில் அலட்சியம் செய்த அலுவலர்களை எதிர்த்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரசு அறிவித்த நிவாரண தொகையை வழங்குவதில் அலட்சியம் செய்யும் அதிகாரிகள்

2018ஆம் ஆண்டு மானாவாரி பயிர் விளைவித்து படைப்புழு தாக்குதலால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அந்த உத்தரவின்பேரில் அளித்திருந்த மனுவின் அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகையை வருவாய்த் துறை அலுவலர்கள் இதுவரை முறையாக வழங்கவில்லை என்று விவசாயிகள் சங்கத்தினர் சிவகாசியில் வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்பு வருவாய் கோட்டாட்சியர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைவருக்கும் விரைவில் நிவாரணத் தொகையை முழுவதுமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னரே விவசாயிகள் கலைந்து சென்றனர்.

2018ஆம் ஆண்டு மானாவாரி பயிர் விளைவித்து படைப்புழு தாக்குதலால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அந்த உத்தரவின்பேரில் அளித்திருந்த மனுவின் அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகையை வருவாய்த் துறை அலுவலர்கள் இதுவரை முறையாக வழங்கவில்லை என்று விவசாயிகள் சங்கத்தினர் சிவகாசியில் வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்பு வருவாய் கோட்டாட்சியர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைவருக்கும் விரைவில் நிவாரணத் தொகையை முழுவதுமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னரே விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Intro:விருதுநகர்
16-08-19

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

Tn_vnr_03_farmers_issue_vis_script_7204885Body:சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  பகுதிகளில் விவசாய நிலங்களில் படைப்புழு தாக்குதலுக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகையை அதிகாரிகள் முறையாக வழங்கவில்லை என்று குற்றம்சாட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்....

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு மானாவாரி பயிர் செய்த விவசாயிகள் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டு மிகவும் நஷ்டம் ஏற்பட்டது. இந்திலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது அந்த உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் மனு அளித்திருந்தனர் அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய  நிவாரணத் தொகையை வருவாய் துறை அதிகாரிகள் இதுவரை முறையாக வழங்கவில்லை என்றும் வழங்கிய வர்களுக்கும்  முழு தொகை வழங்காமல் குறைவான தொகையை வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் சிவகாசியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்பு வருவாய் கோட்டாட்சியர் தினகரன் அவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அலுவலகத்திற்கு அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைவருக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணத் தொகையை முழுவதுமாக வழங்கப்படும் என்று உத்தரவிட்டார் இதன் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.