ETV Bharat / state

கழிவுநீர் தொட்டியில் சிக்கிய வடமாநில தொழிலாளி 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

விருதுநகர்: சிவகாசி அருகே தனியார் இறகுப்பந்து விளையாட்டு மைதானத்தில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு தொட்டியை சுத்தம் செய்ய இறங்கியபோது மண் சரிந்ததால் தொட்டியில் சிக்கிய வடமாநில தொழிலாளி 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டார்.

author img

By

Published : Feb 5, 2019, 11:35 PM IST

1


சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள தனியார் இறகுப்பந்து விளையாட்டு மைதானத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் ஏற்பட்ட நீர் கசிவை சரி செய்வதற்காக காலை 10.30 மணிக்கு வட மாநிலத்தை சேர்ந்த 3 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஒருவர் 10 அடி பள்ளத்தில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார். பணியின் போது எதிர்பாராதவிதமாக தொட்டியின் தடுப்பு சுவர் உடைந்து மண் சரிவு ஏற்பட்டது. இதில் பணியில் ஈடுபட்டிருந்தவர் மாட்டி கொண்டார்.

இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்து வீரர்கள், 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். பல மணி நேரங்களாக மண் சரிவில் இருந்த அவருக்கு மூச்சுத்திணறலும், கால் பகுதியில் லேசான காயமும் ஏற்பட்டதால் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள தனியார் இறகுப்பந்து விளையாட்டு மைதானத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் ஏற்பட்ட நீர் கசிவை சரி செய்வதற்காக காலை 10.30 மணிக்கு வட மாநிலத்தை சேர்ந்த 3 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஒருவர் 10 அடி பள்ளத்தில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார். பணியின் போது எதிர்பாராதவிதமாக தொட்டியின் தடுப்பு சுவர் உடைந்து மண் சரிவு ஏற்பட்டது. இதில் பணியில் ஈடுபட்டிருந்தவர் மாட்டி கொண்டார்.

இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்து வீரர்கள், 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். பல மணி நேரங்களாக மண் சரிவில் இருந்த அவருக்கு மூச்சுத்திணறலும், கால் பகுதியில் லேசான காயமும் ஏற்பட்டதால் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தனியார் பால் ஒரு நிறுவனத்தின் தண்ணீர் சுத்திகரிப்பு தொட்டியில் இறங்கிய வடமாநிலத்தவர் மண் சரிந்து சிக்கிய தொழிலாளி 9 போராட்டத்திற்கு பிறகு மீட்பு

சிவகாசி அருகே திருத்தங்கலில் தனியார் நிறுவனத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி உள்ள நீர் கசிவை செய்வதற்காக இன்று வட மாநிலத்தவர் ஒருவர் 12 அடி பள்ளத்தில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டியில் தடுப்பு சுவர் உடைந்து மண் சரிந்து அதில் மாட்டிக் கொண்டார் தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 9 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த தொழிலாளியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவர் காலை 9.30 மணிக்கு மணல் சரிவில் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இவருடன் 2 வடமாநில தொழிலாளிகள் இறங்கியுள்ளனர் அவர்களுக்கு மணல் சரிவில் எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.