ETV Bharat / state

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாத சிவகாசி சிறுமி கொலை வழக்கு குற்றவாளி

author img

By

Published : Feb 7, 2020, 7:14 AM IST

விருதுநகர்: பாதுகாப்பு காரணங்கள், கைதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிவகாசி சிறுமி பாலியல் வழக்கில் கைதான போஜம் அலியை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை.

rape accused
rape accused

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கடந்த மாதம் 21ஆம் தேதி போஜம் அலி என்ற வடமாநில இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு விசாரணைக்காக அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதிபதி பரிமளா பிப்ரவரி 6ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்

பின்னர் போஜம் அலி, விசாரணை கைதியாக மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இதனிடையே நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய போஜம் அலியின் கை, கால் உள்ளிட்டவைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் காவல் துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை.

உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் போஜம் அலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கடந்த மாதம் 21ஆம் தேதி போஜம் அலி என்ற வடமாநில இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு விசாரணைக்காக அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதிபதி பரிமளா பிப்ரவரி 6ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்

பின்னர் போஜம் அலி, விசாரணை கைதியாக மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இதனிடையே நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய போஜம் அலியின் கை, கால் உள்ளிட்டவைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் காவல் துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை.

உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் போஜம் அலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Intro:விருதுநகர்
06-02-2020

பாதுகாப்பு காரணங்கள் மற்றும் கைதியின் உடல்நிலை சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிவகாசி சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் போஜம்அலியை போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவில்லை

Tn_vnr_07_rape_murder_accused_vis_script_7204885Body:ஸ்ரீவில்லிபுத்தூரில் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் கைதியின் உடல்நிலை சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் போஜம்அலியை போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவில்லை....

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் சிவகாசி சிறுமி பாலியல் மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் போஜம் அலியை காவல்துறையினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவில்லை. கடந்த மாதம் 21ம் தேதி சிவகாசியை சேர்ந்த சிறுமி பாலியியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின்பு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி பரிமளா பிப்ரவரி 6 ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டு அதனைத்தொடர்ந்து போஜம் அலியை விசாரணை கைதியாக மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த படவேண்டிய போஜம் அலியின் கை,கால் உள்ளிட்டவைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. எனவே அவரது உடல்நிலையை சரியில்லாத காரணத்தால் காவல்துறையினர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தவில்லை. ஆகையால் அவருக்கு அடுத்த வாய்தா குறித்த சம்மனை நீதிமன்றத்திலிருந்து பெற்றுக்கொண்ட போலீசார் மதுரை சிறையில் உள்ள போஜம் அலியிடம் கொடுக்க உள்ளனர். குறிப்பாக உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இன்று போஜம் அலியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தப்படவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.