ETV Bharat / state

'மெட்ராஸ், தமிழ்நாடு ஆக' மாறக் காரணமாக இருந்த சங்கரலிங்கனாரின் நினைவு தினம்! - தமிழ்நாடு பெயர் கோரி போராடிய சங்கரலிங்கனார்

விருதுநகர்: தமிழகத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் 63ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

sangaralinganar
author img

By

Published : Oct 13, 2019, 5:04 PM IST

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகள் பேசுபவர்களும் இருந்தனர். மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ் பேசுவோர்தான் அதிக எண்ணிக்கை கொண்டவர்கள், எனவே மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தவர் தியாகி சங்கரலிங்கனார்.

தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபம்

இவர், 76 நாள்கள் தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி உண்ணாவிரதம் இருந்தார். காமராஜர், ராஜாஜி, அண்ணா போன்ற தலைவர்கள் பலர் வலியுறுத்தியும் அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தார். தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்து 1956ஆம் ஆண்டு அக்டோபர் 13 இல்உயிர் நீத்தார். அவருடைய தியாகத்தைத் தொடர்ந்து, மக்களிடையே "தமிழ்நாடு" என்ற பெயருக்கு ஆதரவு பெருகத் தொடங்கியது. இதனையடுத்து சட்டப் பேரவையிலும், மக்களவையிலும் இந்தக் கோரிக்கை ஒலிக்க ஆரம்பித்தது.

அவரது மறைவுக்குப் பின்னர் பல்வேறு அமைப்பினர் 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றக் கோரி போராட்டம் நடத்தினர். அதன்படி 1962ஆம் ஆண்டு மார்ச் மாதம் மக்களவையில் "தமிழ்நாடு” என பெயர் மாற்றக் கோரிக்கைக்காகத் தனி மசோதா கொண்டு வந்தபோது, தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 1964ஆம் ஆண்டு ஜனவரியில் சட்டப் பேரவையில் "தமிழ்நாடு" என்ற பெயரை மெட்ராஸ் மாநிலத்துக்கு சூட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன் பிறகு அண்ணா தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 1967ஆம் ஆண்டில் அப்போதைய சென்னை மாகாணத்துக்கு "தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 1968 ஆம் ஆண்டு நவம்பர் 23இல் "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்ற மசோதா மக்களவையில் நிறைவேறியது. அதனைத் தொடர்ந்து 1969ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி சென்னை மாகாணம், "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு என பெயர் மாற முக்கியக் காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்கனாரின் 63ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சங்கரலிங்கனார் 1895ஆம் ஆண்டு விருதுநகரில் பிறந்தவர். இவரின் உயிர்த் தியாகத்தை போற்றும் விதமாக கடந்த 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சங்கரலிங்கனாரின் சொந்த ஊரான விருதுநகரிலேயே மணிமண்டபம் அமைத்து அவருக்கு சிறப்பும் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தாக்குதலுக்கு உள்ளான பாதுகாப்பு படையினர்!

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகள் பேசுபவர்களும் இருந்தனர். மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ் பேசுவோர்தான் அதிக எண்ணிக்கை கொண்டவர்கள், எனவே மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தவர் தியாகி சங்கரலிங்கனார்.

தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபம்

இவர், 76 நாள்கள் தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி உண்ணாவிரதம் இருந்தார். காமராஜர், ராஜாஜி, அண்ணா போன்ற தலைவர்கள் பலர் வலியுறுத்தியும் அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தார். தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்து 1956ஆம் ஆண்டு அக்டோபர் 13 இல்உயிர் நீத்தார். அவருடைய தியாகத்தைத் தொடர்ந்து, மக்களிடையே "தமிழ்நாடு" என்ற பெயருக்கு ஆதரவு பெருகத் தொடங்கியது. இதனையடுத்து சட்டப் பேரவையிலும், மக்களவையிலும் இந்தக் கோரிக்கை ஒலிக்க ஆரம்பித்தது.

அவரது மறைவுக்குப் பின்னர் பல்வேறு அமைப்பினர் 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றக் கோரி போராட்டம் நடத்தினர். அதன்படி 1962ஆம் ஆண்டு மார்ச் மாதம் மக்களவையில் "தமிழ்நாடு” என பெயர் மாற்றக் கோரிக்கைக்காகத் தனி மசோதா கொண்டு வந்தபோது, தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 1964ஆம் ஆண்டு ஜனவரியில் சட்டப் பேரவையில் "தமிழ்நாடு" என்ற பெயரை மெட்ராஸ் மாநிலத்துக்கு சூட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன் பிறகு அண்ணா தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 1967ஆம் ஆண்டில் அப்போதைய சென்னை மாகாணத்துக்கு "தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 1968 ஆம் ஆண்டு நவம்பர் 23இல் "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்ற மசோதா மக்களவையில் நிறைவேறியது. அதனைத் தொடர்ந்து 1969ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி சென்னை மாகாணம், "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு என பெயர் மாற முக்கியக் காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்கனாரின் 63ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சங்கரலிங்கனார் 1895ஆம் ஆண்டு விருதுநகரில் பிறந்தவர். இவரின் உயிர்த் தியாகத்தை போற்றும் விதமாக கடந்த 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சங்கரலிங்கனாரின் சொந்த ஊரான விருதுநகரிலேயே மணிமண்டபம் அமைத்து அவருக்கு சிறப்பும் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தாக்குதலுக்கு உள்ளான பாதுகாப்பு படையினர்!

Intro:விருதுநகர்
13-10-19

தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள்

Tn_vnr_01_sangara_linganar_story_vis_script_7204885Body:இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு மெட்ராஸ் மாகாணத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என, பல மொழிகள் பேசுபவர்களும் இருந்தனர். மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ் பேசுவோர்தான் அதிக எண்ணிக்கை கொண்டவர்கள் எனவே மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட தமிழகத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தவர் தியாகி சங்கரலிங்கனார். இவர் விருதநகரைச் சேர்ந்த காந்தியவாதி
தொடர்ந்து 76 நாள்கள் தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி உண்ணாவிரதம் இருந்தார். காமராஜர், ராஜாஜி, அண்ணா போன்ற தலைவர்கள் பலர் வலியுறுத்தியும் அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தார் தொடர்ந்து அவரது உடல்நிலைமோசமடைந்து 1956ஆம் ஆண்டு அக்டோபர் 13 ல் அவர் மறைந்தார். அவருடைய தியாகத்தைத் தொடர்ந்து, மக்களிடையே "தமிழ்நாடு' என்ற பெயருக்கு ஆதரவு பெருகியது. சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் இந்தக் கோரிக்கை ஒலித்தது. அவரது மறைவுக்குப் பின்னர் பல்வேறு அமைப்பினர் தமிழ்நாடு என பெயர் மாற்றக் கோரி போராட்டம் நடத்தினர். அதன்படி 1962ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் "தமிழ்நாடு' பெயர் மாற்றக் கோரிக்கைக்காகத் தனி மசோதா கொண்டுவந்தபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 1964 ஜனவரியில் சட்டப் பேரவையில் "தமிழ்நாடு' என்ற பெயரை மாநிலத்துக்கு சூட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது. 
பிறகு அண்ணா தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 1967ஆம் ஆண்டில் அப்போதைய சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 1968 நவம்பர் 23இல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அதைத் தொடர்ந்து 1969ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி சென்னை மாகாணம், தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இவ்வாறு
சென்னை மகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றக்கோரி தொடர்ந்து 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மொழி போர் தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் 63 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். சங்கரலிங்கனார் 1895ஆம் ஆண்டு விருதுநகரில் பிறந்தவர்.
இவரின் உயிர் தியாகத்தை போற்றும் விதமாக கடந்த 2015ஆம் ஆண்டு தமிழக அரசு சங்கரலிங்கனாரின் சொந்த ஊரான விருதுநகரிலேயே மணிமண்டபம் அமைத்து அவருக்கு சிறப்பு சேர்த்தது. அந்த மணிமண்டபத்திலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அவரின் 63 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பாகவும் வணிகர்கள் சங்கம் சார்பாகவும் லோடுமேன் சங்கம் சார்பாகவும் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி சார்பாகவும் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாகவும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இவரை போன்ற தியாகிகளின் நினைவை போற்ற வேண்டியது அனைவரின் கடமையாகும்.

பேட்டி:
மணிமாறன் (பொதுமக்கள்) Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.