ETV Bharat / state

வெடி விபத்தில் காயமடைந்த மூதாட்டிக்கு உரிய நிவராணம் கிடைக்குமா?

author img

By

Published : Mar 17, 2020, 9:23 AM IST

விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மூதாட்டிக்கு நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் அவர் புகார் மனு அளித்துள்ளார்.

வெடி விபத்தில் காயமடைந்த மூதாட்டிக்கு உரிய நிவராணம் கிடைக்குமா?
வெடி விபத்தில் காயமடைந்த மூதாட்டிக்கு உரிய நிவராணம் கிடைக்குமா?

விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலையில் கடந்த மாதம் 19ஆம் தேதி வெடி விபத்து நடந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் மதுரை மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கும் ஆலை நிர்வாகம் இழப்பீடு வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. ஆனால் இந்த விபத்தில் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அன்னலட்சுமி ( 60) தனக்கு ஆலை நிர்வாகம் எந்தவிதமான இழப்பீடும் வழங்கவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

வெடி விபத்தில் காயமடைந்த மூதாட்டிக்கு உரிய நிவராணம் கிடைக்குமா?

இது குறித்து தெரிவித்த அன்னலட்சுமியின் மகன் ஹரி ராஜன், "பட்டாசு ஆலை நிர்வாக உரிமையாளரிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. தற்போது வரை சிகிச்சைக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் வரை செலவாகி உள்ளது. இதனால் அந்த பட்டாசு ஆலை உரிமையாளர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க; தாய் பாசத்திற்கு காலமும் தூரமும் தடை இல்லை! மகனின் உணர்ச்சி பயணம்!

விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலையில் கடந்த மாதம் 19ஆம் தேதி வெடி விபத்து நடந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் மதுரை மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கும் ஆலை நிர்வாகம் இழப்பீடு வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. ஆனால் இந்த விபத்தில் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அன்னலட்சுமி ( 60) தனக்கு ஆலை நிர்வாகம் எந்தவிதமான இழப்பீடும் வழங்கவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

வெடி விபத்தில் காயமடைந்த மூதாட்டிக்கு உரிய நிவராணம் கிடைக்குமா?

இது குறித்து தெரிவித்த அன்னலட்சுமியின் மகன் ஹரி ராஜன், "பட்டாசு ஆலை நிர்வாக உரிமையாளரிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. தற்போது வரை சிகிச்சைக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் வரை செலவாகி உள்ளது. இதனால் அந்த பட்டாசு ஆலை உரிமையாளர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க; தாய் பாசத்திற்கு காலமும் தூரமும் தடை இல்லை! மகனின் உணர்ச்சி பயணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.