ETV Bharat / state

அதிமுக ஆன்மீக ஆட்சியை நடத்தி வருகிறது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழாரம்!

author img

By

Published : Jan 21, 2020, 11:41 PM IST

விருதுநகர்: தாய்மார்களுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக ஆன்மீக ஆட்சியை நடத்தி வருகிறது என புகழாரம் சூட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் தேசபந்து மைதானத்தில், எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் 300 தாய்மார்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், ‘தமிழ்நாடு முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் ஆட்சியை சிறப்போடு நடத்திவருகின்றனர். இது ஒரு ஆன்மீக ஆட்சி, ஏழை மக்களை பாதுகாக்கும் ஆட்சி, இதுதான் இந்தியாவின் ஆட்சி, புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி’ என புகழாரம் சூட்டினார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் தமிழ்நாட்டை வளம் காணும் தமிழ்நாடாக, பிற மாநிலங்கள் பொறாமைப்படும் வளர்ச்சி பெறும் அளவிற்கு ஆட்சி செய்து வருவதாக கூறியுள்ளார்.இதன் காரணமாக தமிழ்நாடு மத்திய அரசின் பல விருதுகளை குவித்துக்கொண்டு வருகிறது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

எம்ஜிஆர் அருகில் இருந்த காரணத்தினால் தான் அண்ணா நாட்டிற்கு அடையாளம் காணப்பட்டார். எம்ஜிஆரை பார்த்து தான் அண்ணாவிற்கு தமிழ்நாட்டு மக்கள் ஓட்டு போட்டனர்.

எம்ஜிஆர் இருந்ததால்தான் கலைஞர் முதலமைச்சரானார். எம்ஜிஆர் முதலமைச்சரான பிறகு கலைஞரால் முதலமைச்சராக முடியவில்லை. அதிமுக வெற்றி பெற்றால்தான் நாடு வளர்ச்சியடையும், ஆன்மீகம் பெருகும், குற்றங்கள் குறையும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெரியார் எதிர்ப்பு அரசியலில் ரஜினிகாந்த் ஈடுபடுகிறாரா? - பதில் அளிக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்...

விருதுநகர் தேசபந்து மைதானத்தில், எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் 300 தாய்மார்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், ‘தமிழ்நாடு முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் ஆட்சியை சிறப்போடு நடத்திவருகின்றனர். இது ஒரு ஆன்மீக ஆட்சி, ஏழை மக்களை பாதுகாக்கும் ஆட்சி, இதுதான் இந்தியாவின் ஆட்சி, புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி’ என புகழாரம் சூட்டினார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் தமிழ்நாட்டை வளம் காணும் தமிழ்நாடாக, பிற மாநிலங்கள் பொறாமைப்படும் வளர்ச்சி பெறும் அளவிற்கு ஆட்சி செய்து வருவதாக கூறியுள்ளார்.இதன் காரணமாக தமிழ்நாடு மத்திய அரசின் பல விருதுகளை குவித்துக்கொண்டு வருகிறது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

எம்ஜிஆர் அருகில் இருந்த காரணத்தினால் தான் அண்ணா நாட்டிற்கு அடையாளம் காணப்பட்டார். எம்ஜிஆரை பார்த்து தான் அண்ணாவிற்கு தமிழ்நாட்டு மக்கள் ஓட்டு போட்டனர்.

எம்ஜிஆர் இருந்ததால்தான் கலைஞர் முதலமைச்சரானார். எம்ஜிஆர் முதலமைச்சரான பிறகு கலைஞரால் முதலமைச்சராக முடியவில்லை. அதிமுக வெற்றி பெற்றால்தான் நாடு வளர்ச்சியடையும், ஆன்மீகம் பெருகும், குற்றங்கள் குறையும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெரியார் எதிர்ப்பு அரசியலில் ரஜினிகாந்த் ஈடுபடுகிறாரா? - பதில் அளிக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்...

Intro:விருதுநகர்
21-01-2020

அதிமுக ஆட்சி ஆன்மீக ஆட்சி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழாரம்

Tn_vnr_06_rajenthira_balaji_speech_vis_script_7204885Body:விருதுநகர் தேசபந்து மைதானத்தில் எம்ஜிஆர் அவர்களின் 103 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் 300 தாய்மார்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது இதில் கலந்து கொண்ட தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய போது தமிழக முதல்வரும் துணை முதல்வரும் தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியை நடத்தி வருகின்றனர் ஏழை மக்களை பாதுகாக்கும் ஆட்சி இந்தியாவின் ஆட்சி புரட்சித்தலைவி ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் தமிழகத்தை வளம் காணும் தமிழகமாக பிற மாநிலங்கள் பொறாமைப்படும் வளர்ச்சி பெறும் மாநிலமாக தமிழகத்தை ஆட்சி செய்து வருகின்றனர் இதன் காரணமாக தமிழகம் மத்திய அரசின் பல விருதுகளை குவித்துக்கொண்டு வருகிறது. எம்ஜிஆர் அருகில் இருந்த காரணத்தினால் தான் அண்ணா நாட்டிற்கு அடையாளம் காணப்பட்டார். எம்ஜிஆரை பார்த்து தான் அண்ணாவிற்கு தமிழக மக்கள் ஓட்டு போட்டனர் எம்ஜிஆர் இருந்ததால்தான் கலைஞர் முதல்வரானார் எம்ஜிஆரை தூக்கி எறிந்த பின்பு இறக்கும்வரை கலைஞரால் முதல்வராக முடியவில்லை. அதிமுக வெற்றி பெற்றால்தான் நாடு வளர்ச்சி அடையும் ஆன்மீகம் பெருகும் குற்றங்கள் குறையும் விருதுநகரில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் விழாவில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.