விருதுநகர்:CHILD MURDER CASE: கொடைக்கானல் அருகேவுள்ள பாய்ச்சலூர் கிராமத்தில் அரசுப் பள்ளியில் படித்துவந்த சிறுமி பிரித்திகாவை, பள்ளி மைதானத்தில் வைத்து அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளனர்.
இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல் துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்; அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வெள்ளாளர் முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏராளமானோர் திரண்டிருந்து சிறுமியை கொலை செய்தவர்களைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: மனைவி அடித்துக் கொலை? - தலைமறைவான கணவருக்கு வலைவீச்சு