ETV Bharat / state

'முடிந்தா கைது பண்ணுடா..!' - போதையில் சிறைக்காவலரின் 'பீப்' வீடியோ வைரல்! - குடிபோதையில் சிறையில் ரகளை செய்த காவலர்

விருதுநகர்: குடிபோதையில் சட்டையை கழற்றிக் கொண்டு மாவட்ட சிறைச்சாலை காவலர் ஒருவர், ஆபாச வார்த்தைகள் பேசி ரகளையில் ஈடுபடும் வீடியோ வெளியாகி காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police
author img

By

Published : Jun 3, 2019, 7:18 PM IST

விருதுநகர் - மதுரை சாலையில் மாவட்ட சிறைச்சாலையில் 80 கைதிகள் உள்ளனர். அங்கு பாதுகாப்புக்காக 20க்கும் மேற்பட்ட காவலர்கள் உள்ளனர். சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் சிறைக்காவலர்கள் லஞ்சம் வாங்குவதும், உணவு மற்றும் பொருட்களை கைதிகளுக்கு காவலர்கள் சரியாக கொடுப்பதில்லை என்றும் நீண்ட காலமாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில் சிறைச்சாலை வளாகத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ, வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிறைச்சாலையில் பணிபுரியும் காவலர் ஒருவர், குடிபோதையில் பணியில் இருக்கும் காவலர்களை ஆபாசமான முறையில் பேசி சண்டையிடுவது பதிவாகியுள்ளது. விருதுநகர் மாவட்ட சிறைக்குள் காவலர்களுக்குள் தகராறு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவலர் ரகளையில் ஈடுபட்ட வீடியோ

இச்சம்பவம் கடந்த மாதம் நடந்தது என்றும், சண்டையில் ஈடுபட்ட காவலருக்கு சென்னை புழல் சிறைக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்று காவல்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

விருதுநகர் - மதுரை சாலையில் மாவட்ட சிறைச்சாலையில் 80 கைதிகள் உள்ளனர். அங்கு பாதுகாப்புக்காக 20க்கும் மேற்பட்ட காவலர்கள் உள்ளனர். சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் சிறைக்காவலர்கள் லஞ்சம் வாங்குவதும், உணவு மற்றும் பொருட்களை கைதிகளுக்கு காவலர்கள் சரியாக கொடுப்பதில்லை என்றும் நீண்ட காலமாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில் சிறைச்சாலை வளாகத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ, வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிறைச்சாலையில் பணிபுரியும் காவலர் ஒருவர், குடிபோதையில் பணியில் இருக்கும் காவலர்களை ஆபாசமான முறையில் பேசி சண்டையிடுவது பதிவாகியுள்ளது. விருதுநகர் மாவட்ட சிறைக்குள் காவலர்களுக்குள் தகராறு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவலர் ரகளையில் ஈடுபட்ட வீடியோ

இச்சம்பவம் கடந்த மாதம் நடந்தது என்றும், சண்டையில் ஈடுபட்ட காவலருக்கு சென்னை புழல் சிறைக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்று காவல்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

விருதுநகர்
03-06-19

விருதுநகர் மாவட்ட சிறைச்சாலையில் குடிபோதையில் சட்டையை கழற்றிக் கொண்டு காவலர்களுக்குள் ரகளை செய்யும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரில் உள்ள மதுரை ரோட்டில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது இங்கு 80 கைதிகள் உள்ளனர் பாதுகாப்பிற்காக 20க்கும் மேற்பட்ட போலீசார் உள்ள சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் லஞ்சம் வாங்குவதும் அவர்கள் வழங்கும் உணவு மற்றும் பொருட்களை கைதிகளுக்கு போலீசார்கள் கொடுப்பதில்லை என்றும் நீண்ட காலமாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் சிறைச்சாலை வளாகத்தில் நடந்த ஒரு சம்பவம் வாட்ஸ் அப்பில் தற்போது வீடியோவாக வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் சிறைச்சாலையில் பணிபுரியும் கதிரவன் குடிபோதையில் பணியில் இருக்கும் காவலர்களை ஆபாசமான முறையில் பேசி சண்டையிடும் காட்சி பதிவாகியுள்ளது
விருதுநகர் மாவட்ட சிறைக்குள் காவலர்களுக்குள் தகராறு செய்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறைக்குள் இருக்கும் போலீஸ்காரர்கள் கைதிகளை பார்க்க வருபவர்களிடம் லஞ்சம் வாங்குவது மட்டும் உள்ளே நடக்கும் பேரங்கள் குறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என அனைத்து தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து போலீஸ் வட்டாரங்களில் தெரிவிப்பது இந்த சம்பவம் சிறைச்சாலையில் கடந்த மாதம் நடந்தது. இது சண்டையில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு 17b வழங்கப்பட்டு சென்னை புழல் சிறைக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என கூறுகின்றனர்.

TN_VNR_2_3_POLICE_FIGHT_VISUAL_7204885

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.