Rajendra balaji into interrogate him: வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைதுசெய்யப்பட்டு 15 நாள்கள் நீதிமன்ற காவலில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை எனக் காவல் துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் முன்பிணை கோரிய மனு மீதான விசாரணை வரும் 10ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில் அதன் தீர்ப்பைப் பொறுத்து பின்னர் காவலில் எடுத்து விசாரணை செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நடிகர் சத்யராஜுக்கு கரோனா பாதிப்பு!