ETV Bharat / state

'பேனரை அகற்றிய பின் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர்கள்' - Minister function banner remove

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பிளக்ஸ் பேனர்களை அகற்றினால்தான் பங்கேற்போம் என அமைச்சர்கள் உத்தரவிட்டதை அடுத்து உடனடியாக அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டன.

banner remove
author img

By

Published : Sep 14, 2019, 6:58 PM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத் தொடக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோரை வரவேற்கும் விதமாக அருப்புக்கோட்டையில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அமைச்சர்கள், பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்றினால்தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்வோம் என கூறினர். அதைத் தொடர்ந்து அனைத்து பிளக்ஸ் பேனர்களும் அகற்றப்பட்டன.

பேனரை அகற்றிய பின் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர்கள்

அதன்பின், நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை தொடங்கி வைத்து 1,185 பயனாளிகளுக்கு ரூ.9.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத் தொடக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோரை வரவேற்கும் விதமாக அருப்புக்கோட்டையில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அமைச்சர்கள், பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்றினால்தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்வோம் என கூறினர். அதைத் தொடர்ந்து அனைத்து பிளக்ஸ் பேனர்களும் அகற்றப்பட்டன.

பேனரை அகற்றிய பின் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர்கள்

அதன்பின், நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை தொடங்கி வைத்து 1,185 பயனாளிகளுக்கு ரூ.9.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

Intro:விருதுநகர்
14-09-19

பேனரை அகற்றிய பின்பு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்கள்

Tn_vnr_02_Minister_function_banner_remove_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பிளக்ஸ் பேனர்களை அகற்றினால்தான் நிகழ்ச்சியில் பங்கேற்போம் என அமைச்சர்கள் உத்தரவிட்டதைத் அடுத்து உடனடியாக அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் பால் வளத்துறை அமைச்சர் கே டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சர்களை வரவேற்கும் விதமாக அருப்புக்கோட்டை பகுதியில் சாலையின் இருபுறமும் பிளக்ஸ் பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர்கள் இந்த பிளக்ஸ் பேனர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் பிளக்ஸ் விழுந்து விபத்தில் சிக்கி இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்ததை அடுத்து சாலையில் இருபுறமும் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்றினால்தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்வோம் என அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.

அதைத்தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் சாலையின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்றினர். அனைத்து பிளக்ஸ் பேனர்களும் அகற்றப்பட்ட பின்னரே நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை அமைச்சர்கள் தொடங்கி வைத்து 1,185 பயனாளிகளுக்கு ரூ.9.13 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் 18 இடங்களில் சிறு அம்மா பல்பொருள் விற்பனை நிலையங்களையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.