ETV Bharat / state

ரஜினிக்கு அதிமுக அமைச்சர் ஆதரவு?

author img

By

Published : Jan 23, 2020, 4:39 PM IST

விருதுநகர்: ”ரஜினிகாந்த் என்ற தனிமனிதனை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. அவர் தமிழச்சியை திருமணம் செய்தவர்” என கூறியிருப்பதன் மூலம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரஜினிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாடு செய்திகள்
விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜிராஜேந்திர பாலாஜி

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள உதவி ஆணையர் மற்றும் உதவித் தணிக்கை அலுவலர் அலுவலகக் கட்டடங்களுக்கு, அம்மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். கண்ணான் மற்றும் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் பூமி பூஜை செய்யப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ’ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் தாக்கும் இயக்கமாக திராவிடர் கழகம் உள்ளது. ரஜினி ரசிகர்கள், இந்த பிரச்னையில் பொறுமை காப்பது தனக்கு சங்கடமாக உள்ளது. பெரியாரை அவமரியாதையாக ரஜினி பேசவில்லை. திராவிடர் கழகத்தினர் ரஜினியை மிரட்டி பார்க்கின்றனரா?

விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜிராஜேந்திர பாலாஜி

ஆன்மீகவாதிகளை பழிதீர்க்கும் செயலை திகவினர் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றனர். ரஜினிகாந்த் ஒரு நியாயவாதி. நல்ல மனிதர். மனதில் பட்டதை பேசுபவர். அவர் பேசிய நியாயத்தை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். திமுகவின் முகமூடியாகத்தான் திக திகழ்கிறது. ரஜினிகாந்த் என்ற தனிமனிதனை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. அவர் தமிழச்சியை திருமணம் செய்தவர்” என்றும் கூறினார்.

ஆர் எஸ் எஸ் இயக்கத்தினரைப் பற்றி பேசுகையில், "ஆர் எஸ் எஸ் இயக்கத்தினர் என்ன பயங்கரவாதிகளா? அவர்கள் எங்கே குண்டு வைத்தார்கள், மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவை, கொலையாளியாகத் தான் பார்க்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்ஸை சார்ந்தவராக பார்க்க முடியாது. கோவிலுக்கு கடவுளை வணங்க செல்பவர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்ஸைச்ன் சேர்ந்தவர்கள் இல்லை. ஜே. என். யூ பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் பொதுநலவாதிகள், தேசியவாதிகள். அவர்கள் வன்முறையை வெறுக்க கூடியவர்கள்” என்றார்.

முதலமைச்சர் பதவி பற்றிய எடப்பாடி பழனிசாமியின் கருத்து பற்றி பேசுகையில், ”அதிமுகவில் அனைவரும் முதலமைச்சர்கள்தான் என எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது, அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. பெரியாரைப் போன்றவர்கள் இல்லையென்றால் என்னைப் போன்றவர்கள் அமைச்சராக இருக்க முடியாது. ஆனால் ஆன்மீகத்தை பொறுத்தவரை, ரஜினி கூறியதில் தவறு இல்லை. ரஜினி ரசிகர்கள் பொறுமையாக உள்ளனர். பொறுமையாக இருக்கும் இந்துக்களை தி.க மற்றும் தி.மு.கவினர் இளிச்சவாயன்களாக பார்க்கிறார்களா? நேர்மையாக சமூக சேவை செய்பவர்கள் எல்லாம் ஆன்மீகவாதிகளே” என பேசினார்.

ரஜினியின் பேச்சுக்கு துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் சூழலில், ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு மூலம் அவர் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

மேலும், இவ்வாறு பேசுவதன் மூலம் ஏற்கனவே மக்கள் மத்தியில் குறைந்திருக்கும் அதிமுகவின் செல்வாக்கு மேற்கொண்டு குறைய வாய்ப்புள்ளதாக ரத்தத்தின் ரத்தங்ங்கள் முணுமுணுத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க: பாலியல் கொலைசெய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு உதவிய அமைச்சர்!

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள உதவி ஆணையர் மற்றும் உதவித் தணிக்கை அலுவலர் அலுவலகக் கட்டடங்களுக்கு, அம்மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். கண்ணான் மற்றும் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் பூமி பூஜை செய்யப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ’ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் தாக்கும் இயக்கமாக திராவிடர் கழகம் உள்ளது. ரஜினி ரசிகர்கள், இந்த பிரச்னையில் பொறுமை காப்பது தனக்கு சங்கடமாக உள்ளது. பெரியாரை அவமரியாதையாக ரஜினி பேசவில்லை. திராவிடர் கழகத்தினர் ரஜினியை மிரட்டி பார்க்கின்றனரா?

விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜிராஜேந்திர பாலாஜி

ஆன்மீகவாதிகளை பழிதீர்க்கும் செயலை திகவினர் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றனர். ரஜினிகாந்த் ஒரு நியாயவாதி. நல்ல மனிதர். மனதில் பட்டதை பேசுபவர். அவர் பேசிய நியாயத்தை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். திமுகவின் முகமூடியாகத்தான் திக திகழ்கிறது. ரஜினிகாந்த் என்ற தனிமனிதனை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. அவர் தமிழச்சியை திருமணம் செய்தவர்” என்றும் கூறினார்.

ஆர் எஸ் எஸ் இயக்கத்தினரைப் பற்றி பேசுகையில், "ஆர் எஸ் எஸ் இயக்கத்தினர் என்ன பயங்கரவாதிகளா? அவர்கள் எங்கே குண்டு வைத்தார்கள், மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவை, கொலையாளியாகத் தான் பார்க்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்ஸை சார்ந்தவராக பார்க்க முடியாது. கோவிலுக்கு கடவுளை வணங்க செல்பவர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்ஸைச்ன் சேர்ந்தவர்கள் இல்லை. ஜே. என். யூ பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் பொதுநலவாதிகள், தேசியவாதிகள். அவர்கள் வன்முறையை வெறுக்க கூடியவர்கள்” என்றார்.

முதலமைச்சர் பதவி பற்றிய எடப்பாடி பழனிசாமியின் கருத்து பற்றி பேசுகையில், ”அதிமுகவில் அனைவரும் முதலமைச்சர்கள்தான் என எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது, அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. பெரியாரைப் போன்றவர்கள் இல்லையென்றால் என்னைப் போன்றவர்கள் அமைச்சராக இருக்க முடியாது. ஆனால் ஆன்மீகத்தை பொறுத்தவரை, ரஜினி கூறியதில் தவறு இல்லை. ரஜினி ரசிகர்கள் பொறுமையாக உள்ளனர். பொறுமையாக இருக்கும் இந்துக்களை தி.க மற்றும் தி.மு.கவினர் இளிச்சவாயன்களாக பார்க்கிறார்களா? நேர்மையாக சமூக சேவை செய்பவர்கள் எல்லாம் ஆன்மீகவாதிகளே” என பேசினார்.

ரஜினியின் பேச்சுக்கு துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் சூழலில், ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு மூலம் அவர் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

மேலும், இவ்வாறு பேசுவதன் மூலம் ஏற்கனவே மக்கள் மத்தியில் குறைந்திருக்கும் அதிமுகவின் செல்வாக்கு மேற்கொண்டு குறைய வாய்ப்புள்ளதாக ரத்தத்தின் ரத்தங்ங்கள் முணுமுணுத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க: பாலியல் கொலைசெய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு உதவிய அமைச்சர்!

Intro:விருதுநகர்
23-01-2020

ஜெ.என்.யூ பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் பொதுநலவாதிகள், தேசியவாதிகள் அவர்கள் வன்முறையை வெறுக்க கூடியவர்கள் - பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

Tn_vnr_02_rajenthira_balaji_byte_vis_script_7204885Body:இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிதாக உதவி ஆணையர் மற்றும் உதவி தணிக்கை அலுவலர் அலுவலகக் கட்டிடங்கள் கட்டுவதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார் அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் தாக்கி பிழைப்பு நடத்தும் இயக்கமாக திக உள்ளது. ரஜினி ரசிகர்கள் இந்த பிரச்சினையில் பொறுமை காப்பது எனக்கு சங்கடமாக உள்ளது என்றார். பெரியாரை அவமரியாதையாக ரஜினி பேசவில்லை. ரஜினியை மிரட்டி பார்க்கிறார்களா திகவினர், ஆன்மீகவாதிகளை பழிதீர்க்கும் செயலை திகவினர் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர். ரஜினிகாந்த் நியாயவாதி நல்ல மனிதர் மனதில் பட்டதை பேசுபவர் ரஜினிகாந்த்

ரஜினி பேசிய நியாயத்தை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் .திமுகவின் முகமூடியாகதான் திக திகழ்கிறது. ரஜினிகாந்த் என்ற தனிமனிதனை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது அவர் தமிழச்சியை திருமணம் செய்தவர் என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆர் எஸ் எஸ் என்ன பயங்கரவாதிகளா? அவர்கள் எங்கு குண்டு வைத்தார்கள், மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவை கொலையாளியாக தான் பார்க்க வேண்டும் ஆர்.எஸ்.எஸ்ஸை சார்ந்தவராக பார்க்க முடியாது. கோவிலுக்கு சாமி கும்பிட சென்றவர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் - கார்கள் இல்லை. முதலமைச்சர் பதவி பற்றி எடப்பாடி பேசியிருப்பது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. பெரியாரைப் போன்றவர்கள் இல்லையென்றால் என்னை போன்றவர்கள் அமைச்சராக இருக்க முடியாது ஆனால் ஆன்மீகத்தை பொறுத்தவரை ரஜினி கூறியதில் தவறு இல்லை. ரஜினி ரசிகர்கள் பொறுமையாக உள்ளனர். பொறுமையாக இருக்கும் இந்துக்களை தி.க மற்றும் தி.மு.கவினர் இளிச்சவாயன்களா பார்க்கிறார்களா என்றார். நேர்மையாக சமூக சேவை செய்பவர்கள் எல்லாம் ஆன்மீகவாதிகளே என விளக்கமளித்தார்.

சிவகாசியில் குழந்தை இறப்பிற்கு காரணமானவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள். கொள்முதல் விலையை உயர்த்துவதற்காக தனியார் பால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. மக்கள் பால் விலை உயர்வை ஏற்று கொண்டனர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.